காதல்....

உலகத்து கவிகள் எல்லாம்

உன்னை பற்றி

ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்

பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட

அந்த கவிகளிடம் ஒவ்வொரு

எழுத்து இரவல் வாங்கி

உன்னை பற்றி ஒரு

வரி எழுதுகிறேன் - காதலே

நீ காற்றை போல !....

உன் நினைவுகள்….

விட்டு விட்டு
துடிக்கும்
இதயம் கூட
விடாமல்
துடிக்கும் - உன்னை
நினைத்து விட்டால்!....

உன் புன்னகை...

உனக்கென்ன
ஒரு பார்வை
பார்த்து
உதட்டோரம்
சிறு புன்னகை
சிந்தி சென்று
விடுகிறாய் - நீ!...
அம்மாவின்
கைபிடித்து செல்லும்
குழந்தை போல
உன்னையே
தொடர்ந்து வருகிறது
என் மனது!....

செவ்விதழாளே!...

செவ்விதழாளே!...
அடிக்கடி
நீ கொள்ளும் கோபத்தை
அன்றும் என் மீது
காட்டினாய் நீ!..
உன் பொய் கோபத்தை
ரசித்தபடி,
என் விரல்களுடன்
விளையாட...
அலை போன்ற
வளைந்து நெளிந்து
செல்லும் உன்
கூந்தலுக்கு
குடுப்பினை இல்லையோ
என கூறியதும் -
என்னை தவிர
வேறு ஒரு கேசத்தை
தொட்டுவிடுமா
உன் விரல்கள்
என செல்லமாக
என்னை அடிக்க
வரும் என் தேவதையைய்
அப்படியே அள்ளி
அணைத்துக்கொள்கிறேன் நான்!

கோபம்....

அவசர அலுவல்
நேரங்களில்
என்னிடம்
சொல்ல மறந்து நீ
அலுவலகம் விட்டு
செல்லும் சில
நாட்களில்
என்னில் எழும்
கோபம் - உன்
திருமுகமதனை
பார்த்த நொடியில்....
காலை பொழுதினில்...
கடற்கரை மணல்வெளியில்....
காற்றோடு களைந்து...
கவிதை பாடும் - உன்
கூந்தலை போல
கலைந்து விடுகிறது!...

சிந்திக்க வைத்தவளே...

நான் சிகரம்
தொட்டுவிட்டதாக
பாராட்டுபவர்களுக்கு
தெரியுமா...
என்னை -
சிந்திக்க
வைத்தவளே
நீ தான்
என்று!....

நீ.....

பொம்மை வாங்க
கடைக்கு சென்றபோது
உனக்கு என்ன
வேணும் என
கேட்ட
என் அப்பாவிடன்
உன்னை நோக்கி
கை காட்ட
நாணத்தால் சிவந்து
பொம்மைகளுடன்
பொம்மையாக
மாறிப்போனாய் - நீ!...

உன் கொளுசுகளின் ஓசை....


என்னை பெரிய
இசை கலைஞன்
என்பவர்களுக்கு
தெரியுமா?
நான்
ஏழு ஸ்வரங்களும்
கற்றது
உனது
கொளுசுகளிடம் தான்
என்பது!...

நட்சத்திரமே...

உலகத்து நட்சத்திரங்களை
எல்லாம் உனக்குள்
வைத்துக்கொண்டாயோ?....
நீ
சிரிக்கும் போது
அத்தனை
நட்சத்திரங்களும்
ஒளி(உதி)ர்கின்றனவே!...

யாதுமாகாமல் போனவளே!....


உன்னுடன் இணைந்து நடக்கும் போது...
உன்னுடன் இணைந்து உணவருந்தும் போது...
உன்னுடன் இணைந்து தேநீர் அருந்தும் போது...
உன்னுடன் இணைந்து கடைதெரு செல்லும் போது...
உன்னுடன் இணைந்து பணிபுரியும் போது...
உன்னுடன் இணைந்து பயணிக்கும் போது...
உன்னுடைய கால் கொலுசு சிணுங்கும் போது...
உனது சின்ன சின்ன சில்மிசங்களை காணும் போதும்...
வரம்பு மீறாத வாய் சண்டைகளும் ...
எல்லை மீறாத சீண்டல்களும் - நீ
எனது காதலியாக வில்லையே
என்ற ஏக்கத்தை விட - நீ
எனது மனைவியாக வில்லையே
என்ற வருத்தம் தான் மேலோங்கி நிற்கிறது !....
வீ. இளவழுதி

ஆளும் திறன்....

எனக்குள் எல்லோரையும் போல வந்தாய்

எனக்கானவளாக மெள்ள மாறிப்போனாய் - நீ

என் காதலியாகவும் இருந்தது இல்லை - இன்று

என் வாழ்க்கை துணையாகவும் இல்லை - ஆயினும்

என்னை ஆட்சி செய்யும் லாவண்யத்தை

எங்கிருந்து கற்று வந்தாய் - கண்ணம்மா!......

- வீ. இளவழுதி

காதலை யாசிக்கிறேன்....

கல்லூரி வந்த புதிதில்

களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்

சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...

கிடைத்த தருணங்களில் ...

பரிமாறிக்கொண்ட தகவல்களில்...

ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்

ஏதோ ஒரு தருணத்தில்

ஏதோ ஒரு கணத்தில் ...

நீ எனக்குள் காதலியாக

எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..

இத்தனை நாளாக சொல்லாத காதலை

கல்லூரியின் கடைசி நாளிலும்

சொல்லாமல் செல்லலாம் தான் -

ஆனால் பின்னாளில் ஒரு நாள் - நீ

என் முன்னால் வந்து

அன்றே சொல்லி இருந்தால்

உன்னை ஆராதித்திருப்பேனே

என சொன்னால் ....

தூண்டிலிட்ட புழுவாய்

துடித்தல்லவா போகுமென்மனம்

எனவே தான் உன்னை

தொலைத்து விடாமலிருக்க

உனக்குள்ளிருக்கும்

காதலையும் யாசிக்கிறேனடி !....

--வீ.இளவழுதி.

என் உள்ளுயிர்

பத்தோடு பதினொன்றல்ல - நான்

தனித்துவமானவன்

என்பதால் தானோ - உன்

புன்னகையை - எனக்கு

பொன்னகையாக்கி

புத்தொளி பெறச்செய்தாய்!...

பின் ஏனடி என்னை

பிரிந்து சென்று உள்ளுயிர்

பறித்து சென்றாய்!...

வழிப்போக்கனின் வார்த்தைகள்...

தமிழ் போல என்னுள்

தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...

தன்னை பற்றி மட்டுமே

தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்

தாயைப்போல மற்றவர்களும்

தழைத்து வாழ வேண்டுமென

தவமிருப்பவளே!....

சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்

சொல்ல இயலாதவையும் சில உண்டு

இன்று - நானும்

உனக்கு ஆறுதல் சொல்ல

இயலாதவனாகவே உள்ளேன்!...

ஆயிரமாயிரம் பேர்

வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து

உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்

உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ

தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை

அரவணைத்து தூக்கி விடும் -

அந்த தோழமையில் - நீ

அனைத்தையும் மறக்க வேண்டும்

புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;

சாதனைகள் நீ படைத்திட வேண்டும்

சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்

வார்த்தைகளை கோர்த்து உனக்கு

ஆறுதல் சொல்வதை விட

என் தோள் சாய்த்து அரவணைத்து

அழைத்து செல்லும் நட்பாக

இருக்க விரும்புவதால் சொல்கிறேன்

கவலை - நீ மறந்து ;

கணினியில் கரை கண்டிட

காலம் உன்னை போற்றிட

புதிய அத்தியாயம் - நீ படைத்திட

ஆறுதல் சொல்ல வந்த

வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...

- வீ. இளவழுதி

உன் உதட்டோர புன்னகை...

உன் மீது நான் கொண்ட காதல்

உணர்வுகளால் மட்டுமே!

காலம் நம் கனவுகளை

கலைத்தாலும் - என்

காதல் மட்டும்

கலையாது கண்மணி !...

எனக்காக எதையும் செய்வேன்

என்றவளே... என்னவளே !...

எதிர்வரும் காலங்களில்

என் எதிர்படும் நேரங்களில்

என் இதயம் மீண்டும் துடித்திட

என் உயிர் வாங்கிய

உன் உதட்டோர புன்னகையை தா!...

அது போதும் - எனக்கு

இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....

பிரிவு....

எனக்காகவே வளர்ந்தவள் போல
என்னை ஒட்டிய உன் உயரம்
அமைதியாக அலைபாயும் உன்
காந்த கண்கள் !....
நெற்றியின் மத்தியில்
அழகுக்கு அழகு சேர்க்க
அழகாக அமைந்த திருநீறு!...
செதுக்கி வைத்தார்ப்போன்ற
உன் நாசி!..
ரவிவர்மனின் தூரிகையில்
படைக்கபட்டதோ என
வியப்படைய வைக்கும்
உன் உதடுகள் !...
பள்ளாங்குழியினை
ஞாபகப்படுத்தும்
உன் கன்னக்குழி!...
என மொத்தமாக
என்னை கவர்ந்தவளே!...
உன்னுடன் வாழும்
வரம் வேண்டி...
ஒவ்வொரு நொடியும் - நான்
தவமிருக்க....
பந்தங்களின் பாசத்துக்காக
பாவியிவனை
பாதி வழியில்
பரிதவிக்க விட்டு விட்டு
சென்றதேன் கண்ணம்மா?
- வீ, இளவழுதி

என் புதினமே!

ஓரிரண்டு வருடம்
ஒளிந்து விளையாடி
ஒரு வழியாக
உன்னை சந்தித்தேன் -
ஒரு நாள்!...
அயல் தேச பயணம் செல்வதாக
அவசர கதியில் விடை பெற்று
உன் நினைவுகளை தந்து
என் நிஜத்தை எடுத்து சென்றாய்!...
மீண்டும் - உன்
தரிசனம் காண தவமிருந்தேன்
ஆறிரண்டு மாதம்;
நித்தம் நித்தம்
நாள்காட்டி முன்
நாழிரண்டு நாளிகை
நான் நின்று
ஒரு வழியாக
ஒரு வருடம் கடந்து - நீ
வரும் நாள் வர - உன்
முகம் -
நான் கண்டிட ....
வசந்தமே - நீ
வரும் வாசல்
வந்து காத்திருக்க
வழக்கம் போல
விதி சதி செய்து - உன்
தரிசனம் பெரும்
பாக்கியத்தை தடுத்தது !....
நாள் முழுக்க உன்னுடன் பேசிய
தொலைபேசியில் உன்
குரலாவது கேட்குமா - என
என் உள்மன உந்துதலில்
உறங்கும் நேரம் கூட
காத்திருக்கிறேன்...
தங்கமே! தாமரையே!...
என் புதினமே! புவனமே!
புதிராய் - நீ
மாறிப்போனதேனடி!....
--வீ. இளவழுதி

இப்பிறவியின் பயன்......

இதயம் முழுதும் நிரம்பி - கனவுகளில்
நம் வாழ்கைக்கான களம் அமைத்தவளே!.....
ஒரு முறை உந்தன் குரல் கேட்டால்
உயிருடன் வாழும் அர்த்தம் அறிவேனடி!....
ஒரு முறை உந்தன் திருமுகம் பார்த்தால்
இப்பிறவியின் பயன் அடைவேனடி!....
-- வீ. இளவழுதி

என் வாழ்வாக வந்தவளே....

என் இரண்டாம் பணியின்
முதல் தோழியானவளே - உன்
உயிர் வாங்கிய புன்னகையில் - நீ
என் வாழ்வில் முதன்மையானவளானாய்.....

உருண்டோடிய நாட்களில் - உன்
உண்மையான அன்பில் - உயிர்
கசிந்து உன் சிநேகிதனானேன்.....

என் வழிகாட்டுதலில்
வளம் காணுவதாக நீ
கூறிய நொடிகளில் - என்
வாழ்வில் மெல்ல மெல்ல
வசந்தங்களை கொண்டு வந்து
வாசம் செய்ய துவங்கினாய்.....

உனக்காக நான் செதுக்கிய
கவிதைகளை - நீ
படித்த நொடிகளில் ....
சிவந்த உன் கன்னங்கள்
மேலும் நாணத்தில் சிவக்க...
உன்னருகில் நானிருந்து உன்
வெட்கத்தை ரசித்த நொடியில் - நீ
என் காதலியாக மாறிப்போனாய்.....

உன்னோடு நான் சென்ற
இடங்கள் எல்லாம் - உன்
வருகையால் மேலும்
அழகானதை - என்
கண்ணில் நீ
கண்ட காட்சியில் - என்
வாழ்வாக வாசம்
செய்ய துவங்கினாய் .....

அலுவலக நேரங்களில்
அலுவல் இல்லா நேரங்களில்
என்னருகில் நீயோ - இல்லை
உன்னருகில் நானோ ....
நமக்கான வாழ்வைப்பற்றி
மட்டுமின்றி வரம்பின்றி
நாம் விவாதித்த விசயங்கள்....

என்னைப்பற்றி உன் வீட்டாரும்
உன்னைப்பற்றி என் உறவுகளும்
உயர்வாய் மதித்த தருணங்கள்
என
இப்படியாக நம்மைப்பற்றி
சொல்ல ஓராயிரம் இருக்க....

காலதேவனின் இரக்கமற்ற.......
உறவுகளின் இதயமற்ற........
மனதிற்க்கு ஒப்பாத
காரணம் சொல்லி - நம்
கனவு வாழ்வை
மெய்ப்பட செய்யாத
சொந்தங்களும் பந்தங்களும்
நம்மை பிரித்த சந்தோசத்தில்
திலைக்க.....

எறும்புக்கு கூட தீங்கிழைக்காத - நீயும்
எவர் மனதும் புண்படாது வாழும் - நானும்

நமது காதலின் வெற்றியை
மற்றவர்களின்
சந்தோசத்துக்காக சமர்ப்பித்து
காலத்தை வெல்ல இயலாமல்
கரை ஒதுங்கிணோம்
இரு வேறு திசைகளில்
இருவரும்.........
-- வீ இளவழுதி





இப்பிறவி....

என் எண்ணங்களின்

விதையாக விளைந்தவளே!...

என் கற்பனைகளின்

உயிர் சிலையாக வளர்ந்தவளே!....

உன்னைப் படைத்ததால்

பிரம்மன் எனக்குள்

உன்னைப் பற்றிய

சிந்தனைகளை வைத்தானா?...

இல்லை என் உயிர்க்கனவிற்கு

உருவம் தர

உன்னைப் படைத்தானா?....

புரியவில்லை - ஆயினும்....

உன்னைப் பார்த்ததாலே

இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....

--வீ.இளவழுதி