உலகத்து கவிகள் எல்லாம்
உன்னை பற்றி
ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்
பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட
அந்த கவிகளிடம் ஒவ்வொரு
எழுத்து இரவல் வாங்கி
உன்னை பற்றி ஒரு
வரி எழுதுகிறேன் - காதலே
நீ காற்றை போல !....
உலகத்து கவிகள் எல்லாம்
உன்னை பற்றி
ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்
பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட
அந்த கவிகளிடம் ஒவ்வொரு
எழுத்து இரவல் வாங்கி
உன்னை பற்றி ஒரு
வரி எழுதுகிறேன் - காதலே
நீ காற்றை போல !....

எனக்குள் எல்லோரையும் போல வந்தாய்
எனக்கானவளாக மெள்ள மாறிப்போனாய் - நீ
என் காதலியாகவும் இருந்தது இல்லை - இன்று
என் வாழ்க்கை துணையாகவும் இல்லை - ஆயினும்
என்னை ஆட்சி செய்யும் லாவண்யத்தை
எங்கிருந்து கற்று வந்தாய் - கண்ணம்மா!......
- வீ. இளவழுதி
கல்லூரி வந்த புதிதில்
களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்
சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...
கிடைத்த தருணங்களில் ...
பரிமாறிக்கொண்ட தகவல்களில்...
ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்
ஏதோ ஒரு தருணத்தில்
ஏதோ ஒரு கணத்தில் ...
நீ எனக்குள் காதலியாக
எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..
இத்தனை நாளாக சொல்லாத காதலை
கல்லூரியின் கடைசி நாளிலும்
சொல்லாமல் செல்லலாம் தான் -
ஆனால் பின்னாளில் ஒரு நாள் - நீ
என் முன்னால் வந்து
அன்றே சொல்லி இருந்தால்
உன்னை ஆராதித்திருப்பேனே
என சொன்னால் ....
தூண்டிலிட்ட புழுவாய்
துடித்தல்லவா போகுமென்மனம்
எனவே தான் உன்னை
தொலைத்து விடாமலிருக்க
உனக்குள்ளிருக்கும்
காதலையும் யாசிக்கிறேனடி !....
--வீ.இளவழுதி.
பத்தோடு பதினொன்றல்ல - நான்
தனித்துவமானவன்
என்பதால் தானோ - உன்
புன்னகையை - எனக்கு
பொன்னகையாக்கி
புத்தொளி பெறச்செய்தாய்!...
பின் ஏனடி என்னை
பிரிந்து சென்று உள்ளுயிர்
பறித்து சென்றாய்!...
தமிழ் போல என்னுள்
தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...
தன்னை பற்றி மட்டுமே
தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்
தாயைப்போல மற்றவர்களும்
தழைத்து வாழ வேண்டுமென
தவமிருப்பவளே!....
சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்
சொல்ல இயலாதவையும் சில உண்டு
இன்று - நானும்
உனக்கு ஆறுதல் சொல்ல
இயலாதவனாகவே உள்ளேன்!...
ஆயிரமாயிரம் பேர்
வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து
உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்
உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ
தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை
அரவணைத்து தூக்கி விடும் -
அந்த தோழமையில் - நீ
அனைத்தையும் மறக்க வேண்டும்
புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;
சாதனைகள் நீ படைத்திட வேண்டும்
சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்
வார்த்தைகளை கோர்த்து உனக்கு
ஆறுதல் சொல்வதை விட
என் தோள் சாய்த்து அரவணைத்து
அழைத்து செல்லும் நட்பாக
இருக்க விரும்புவதால் சொல்கிறேன்
கவலை - நீ மறந்து ;
கணினியில் கரை கண்டிட
காலம் உன்னை போற்றிட
புதிய அத்தியாயம் - நீ படைத்திட
ஆறுதல் சொல்ல வந்த
வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...
- வீ. இளவழுதி
உன் மீது நான் கொண்ட காதல்
உணர்வுகளால் மட்டுமே!
காலம் நம் கனவுகளை
கலைத்தாலும் - என்
காதல் மட்டும்
கலையாது கண்மணி !...
எனக்காக எதையும் செய்வேன்
என்றவளே... என்னவளே !...
எதிர்வரும் காலங்களில்
என் எதிர்படும் நேரங்களில்
என் இதயம் மீண்டும் துடித்திட
என் உயிர் வாங்கிய
உன் உதட்டோர புன்னகையை தா!...
அது போதும் - எனக்கு
இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....
என் எண்ணங்களின்
விதையாக விளைந்தவளே!...
என் கற்பனைகளின்
உயிர் சிலையாக வளர்ந்தவளே!....
உன்னைப் படைத்ததால்
பிரம்மன் எனக்குள்
உன்னைப் பற்றிய
சிந்தனைகளை வைத்தானா?...
இல்லை என் உயிர்க்கனவிற்கு
உருவம் தர
உன்னைப் படைத்தானா?....
புரியவில்லை - ஆயினும்....
உன்னைப் பார்த்ததாலே
இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....
--வீ.இளவழுதி