பூஜை...
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....
காதலே உன்னை ஆராதிக்கிறேன்....
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....
என்னவளின் பிறந்த நாள்
ஏமாற்றமே வாழ்வு என்றிந்தவனை
என்னவளாக நீ வந்து
எல்லாரையும் அன்பால் அனுசரித்து
ஏற்றமிகு வாழ்வு வாழவைத்தாய்
ஆனாலும்
ஏமாற்றம் இன்னும் நம்மை
ஏமாற்றவே செய்கிறது செல்லமே
என் பிறந்த நாள்
உன் பிறந்த நாள்
நம் திருமண நாள்
புத்தாண்டின் முதல் நாள்
என நமக்கான
முதல் ஆண்டின்
முக்கிய நாட்களில் - உன்
முகம் காண இயலாமல்
முன்னாளில் வாழ்ந்தது போல
இந்நாளிலும் வாழவேண்டிய நிர்பந்தம்
வலிகளை தாங்கி
வாழ பழகியவளே - உன்
வாழ்வின் துணைவனின்றி
வர இருக்கும்
இந்த பிறந்த நாளில்
நமது முருகனின் அருளோடு
வசந்தத்துடன் வாழ்ந்திட
பாசத்துடன் வாழ்த்துகிறேனடி
என் பிறந்த நாள்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்
மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...
ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி
உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை
யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்
அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
மறக்கத்தான் நினைக்கிறேன்...
மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.
தேவை மீண்டும் சுதந்திரம்
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?
தேவதைக்கான கனவு...
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்
என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு
என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி
இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...
என் காதலியே!..
என் தோழியே!...
என் தோழியே!...
என் நட்புக்கு அடித்தளமிட்டவளே...
என்னையும் சாதிக்க தூண்டியவளே!...
என் எழுத்துக்களின் விருச்சமாய் அமைந்தவளே!...
என்னையே எனக்கு புதிதாய் தந்தவளே! ...
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
தந்த அலுவலகத்தில் - நீ
என்னை கடந்து சென்ற சந்தர்ப்பத்தில்
என்னையே எனக்கு மீட்டு தந்த - உன்
ஒத்தை சிரிப்பு கூட கிடைக்காத தருணத்தில்
என் ஒத்தை இதயத்தை
ஓராயிரம் பேர் சம்மட்டியால்
ஓங்கி அடித்தது போல
ஒரு வலி தந்ததேனடி?.........
அறியா காரணம்
மங்கிய வெளிச்சத்தில்
மஞ்சள் நிறத்தவளே! - உன்
கொஞ்சும் புன்னகையில்!.. - என்னை
கொள்ளை கொண்டவளே!...
அர்ச்சுனனின் வில்லை ஞாபகப்படுத்தும்
உதட்டினை உடையவளே!...
உன் மனதை போன்ற
வெள்ளை முத்தரிசி பற்கள்!..
அடர்ந்த புருவங்கள்
அந்த காந்த கண்கள்
பீன்ஸ் விரல்கள்
அறைநிலவாய் நகங்கள்
அமைதியான அர்த்தமான
ஆர்ப்பட்டமில்லா அன்பு வார்த்தைகளை
வெளிப்படுத்தும் குணம்
இன்னும் இன்னும்
உன்னிடம் நான்
கட்டுண்டதற்க்கான
காரணம்.. ஏராளம்
ஆனால்
காரணம் ஒன்று சொல்லடி
என் கண்ணே
என் காதலை உதறியதற்க்கு!
உன்னோடு...
உன் பாசத்தை நீ கொடுத்தால்
உன் அருகாமையை எனக்கு உணர்த்தினால்
உன் அன்பினை அள்ளி தந்தால்
உன் கையால் உணவருந்தினால்
உன் கண்களில் உலகினை கண்டால்
உன்னுடன் வீதிகளில் உலா வந்தால்
உன்னுடன் நம் உறவுகளை சந்தித்தால்
உனக்காக நான் துடிக்க அனுமதித்தால்
உனக்காக என்னையே அர்ப்பணிக்கவிட்டால்
அந்த நாள் அந்த பொழுது
இந்த உலகில் நான் உச்சம் அடைவேனடி!....
நாள் எதுவோ?
எனக்கு மட்டும் பிரியமானவளே!...
மையிட்ட உன் காந்த கண்களா - என்
மாலையினை தாங்கபோகும் உன் தோள்களா
மையல் கொள்ளும் உன் அன்னநடையா
மனதை மயக்கும் உன் மந்திர பேச்சா
கொடியிடை குயிலே!.. என்னை
கொள்ளை கொண்ட மயிலே!...
உலகத்து அழகினை எல்லாம் - நான்
உன்னிடமிருந்து ரசிக்கப்போகும் நாள் எதுவோ?
என் காதலியே!..
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும்
காவியம் படைத்திடுவேன் - உன்
கண் அசைவு கிடைத்து விட்டால்
காலத்தையும் மாற்றி அமைப்பேன்





