உறைய வைக்கும் குளிரில்
உன் மண்ணில் கால் பதித்தேன்
உயிரில் கலந்தவள் நேசித்த பூமி என
உன்னில் கலந்திட்டேன் நொடி பொழுதில்...
உன் மண்ணில் கால் பதித்தேன்
உயிரில் கலந்தவள் நேசித்த பூமி என
உன்னில் கலந்திட்டேன் நொடி பொழுதில்...
நாட்கள் மெல்ல நகர்ந்தன
நரகமாய் என் பொழுதுகள் சென்றன
நரம்புக்குள் ஊடுருவிய குளிரில்
நகர மறுத்தன கால்கள்..
என்னோடு கலந்தவள்
தன் உறவுகளுக்காக
என்னை தூக்கிஎறிந்தது போல
உன்னை என்னால் உதறிவிட
இயலாமல் பரிதவித்து நிற்கின்றேன்...
தன் உறவுகளுக்காக
என்னை தூக்கிஎறிந்தது போல
உன்னை என்னால் உதறிவிட
இயலாமல் பரிதவித்து நிற்கின்றேன்...
வசந்த காலம் என் வாழ்வினில்
வராமல் போகலாம் - ஆனால்
வந்தே தீரும் உன் மண்ணில்...
வாசலில் நின்று காத்திருக்கிறேன்
வருகைக்காக...
வராமல் போகலாம் - ஆனால்
வந்தே தீரும் உன் மண்ணில்...
வாசலில் நின்று காத்திருக்கிறேன்
வருகைக்காக...
No comments:
Post a Comment