எம். ராமசந்திரன் Ex. MLA

அரசியல் புதிர் அல்ல என 
அறிய வைத்தாய் நீ... 
உழைப்பின் மகத்துவமும் 
உண்மையான மனிதநேயமும்
உண்டென இன்றும் 
உணர்த்துகிறாய் நீ!...
பதவியும் பணமும் முன்னிற்கும்
பகட்டு அரசியலில்
பல்லாயிரம் இதயங்களில்
பதவியின்றியும்....
பசுமையாக வாழ்கிறாய் - நீ
என்றும் எங்களில் வழிகாட்டி
என்றும் எங்களின் முதல்வன் நீ..

வருகிறேன்....

ஆண்டுகள் பல கடந்தும்
ஆவலோடு காத்திருக்கிறேன்
வருகிறேன் என்ற..  உன் ஒற்றை
வார்த்தைக்காக - ஆம்
அன்று வாழ்க்கை பயணத்துக்காக..
இன்று வழி பயணத்துக்காக…
                    -- வீ. இளவழுதி

காத்திருப்பு

சம்மதிப்பாய் என்ற நம்பிக்கையில்... 
சாகும் வரை காத்திருக்க செய்வாயே?
                                  -- வீ. இளவழுதி

வாழ்தல் இனிது

கண்ணே!... - நாம்
கண்ட கனவுகளும்
வாழ்ந்த வாழ்வும் - இனிமேல்
இவ்வுலகில் எவரும்
வாழ்ந்திட முடியுமா?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் நித்திரை தொலைக்கிறேன்!...  

கவிதை காதலி

கவிதைகளை காதலித்தவளே - உன்
கடைக்கண் பார்வை
கடைசி வரை கிடைக்காதது ஏனோ?

உலகம்...

புருவம் உயர்த்தி உன்
புன்னகை சிந்தி பார்த்த
அந்த ஒரு பார்வையால்
உணர்ந்தேனடி - நீயின்றி
இல்லையென் உலகமென!!!

மனம்...

செல்லும் திசையெங்கும் நீ
செல்லும் முன்னரே  உன்
மனமறிந்து என் மனம்
பாதை அமைத்து
வைத்திருப்பது அறிவாயா
என் அன்பே!!

நடனம்....

மயிலின் நடனம் கூட
மலிவாய் போனது -உன்
மையலிட்ட அன்னநடையின் முன்..

ஈர்ப்பு....

புவி ஈர்ப்பு விசையின்
புரிதல் உணரக்கண்டேன் - உன்
மையிட்ட  கண்களின்
காந்த சக்தி கண்டபிறகு... 

உள்மனது

பாராமுகமாய் - நீ
என் முன் சென்றாலும்...
பலாப்பழம் போல
உன் மனம்..
பாவியிவனை எந்நாளும்
மற்றவர்களிடம்
பாராட்டிக்கொண்டே
இருப்பதை அறிவேனடி!!!

தமிழர் வாழ்வு...

எனது 250 வது படைப்பு....

மீதமுள்ள வாழ்வு
தேனாய் இனிக்க
மீத்தேனை எதிர்ப்போம்!...

தமிழர் வாழ்வு
தலைநிமிர வைகோவின்
தலைமை ஏற்ப்போம்!!   

நாசி!!!

பிதாகரஸ்  தேற்றத்தை
ஞாபகப்படுத்துகிறது
கூர்மையான  உன் நாசி 

மலர்ச்சி....

கலையான உன் 
கருப்பு முகத்தில் 
ஏழைகளின் வாழ்வில் 
ஏற்படும் மலர்ச்சியை போல 
சிவந்த உன் செவ்விதழ்கள்!!!

நாணம்....

பௌர்ணமி நிலவும்
சற்றே தயங்குகிறது - நீ
வெளிவரும் நாளில்
தானும் தலை காட்ட...

சிந்தனை...

அலட்சியப் படுத்துவதால் தானோ
அன்பே உன்னையே எக்கணமும்
சிந்திக்க  வைக்கிறது!!! 

செல்ல முனகல்...

பைந்தமிழும் தேனமுதும்
சற்றே பின்வாங்குகிறது
உன் சின்ன இடை
பற்றிய நொடியில் நின்
செல்ல முனகலில்...

அமைதி

கடல் அலை போல
எந்நேரமும்
ஓடி வருகிறேன்
கடலில் இட்ட
கல்லாக எப்போதும்
அமைதியாய்
இருப்பதேனோ

மனது...

மகரந்த தூளை 
நோக்கியே செல்லும்
வண்டு போல 
உன்னை நோக்கியே 
செல்கிறது - எனது  மனது 

விழிகள்...

 விரிந்த தாமரையை 
 ஞாபகப்படுத்துகிறது 
அகண்ட  உன் விழிகள் 

இதம்...

தென்றல் கூட
இதமாயில்லை - உன்
செவ்விதழ் வருடிய பிறகு !!!