அம்மா

என் ஒரு வார்த்தை கேட்டிட
எந்நாளும் காத்திருந்தாய்
எனக்கு புரியவைக்க
எள்ளளவும் அலுப்பின்றி
எளிமையாக கற்றுத்தந்தாய்
என் சின்ன சின்ன வெற்றிகளில் - நீ
எத்தனை மகிழ்வு கொண்டாய்
என்னை முழு மனிதனாக்க
எவ்வளவு பொறுமை கொண்டிருப்பாய்
எண்ணிலடங்கா உன் செயல்களை
எப்படி அறிவேன் நான்
என்று தானோ என் முருகன்
எனக்கொரு மகன் தந்தானோ
எங்கும் சொல்வேன் - நீயும்
எனக்கொரு மகள் தானம்மா
எக்கணமும் உன்னை போற்றிடுவேனம்மா

No comments: