பிரிவு

தித்திக்கும் உன் பேச்சால் திரும்பிய
திசையெங்கும் நட்பினை நீ பெற்றாய்!
எந்த சூழலிலும் உன் சிரிப்பால்
எல்லாரையும் கலகலப்பாக்குவாய்! - ஆம்
மலர்ந்த உன் முகத்துக்கு
மகுடமாய் உன் சிரிப்பு!
உன் சுற்றத்தை எப்போதும்
மகிழ்வுடன் இருக்க செய்தவளே!..
அனைவரின் முகத்திலும் எந்நேரமும்
புன்னகையை பொன்னகையாக்கியவளே!
என் புன்னகையை மட்டும்
உன்னுடனே எடுத்து சென்று
என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியதேனடி?
எனக்கானவளாய் நீ இருந்தும்
என்னவளாக நீ மாறாமல் போனதேனடி?

No comments: