வாழ்வு...

உங்களுக்கு தோன்றும்
உணர்வுகள் எங்களுக்கும்
ஏற்படும்!...
நீங்கள் செய்ய நினைப்பதில்
நாங்கள் சிலவற்றை செயல்படுத்த
முற்படலாம்!...
சத்தமாய் பேசுவது சரியெனில்
சுத்தமாய் சத்தமாய் பேச
நிலைப்படும்!...
வாழ்கை எனும் வண்டியை
வழிமாறாமல் இழுக்கும்
இரு மாடுகளை போல
இருவரையும் எண்ணிடுங்கள்!..
இங்கே ஆண்வேறல்ல பெண்வேறல்ல
இன்முகத்தோடு வாழ்ந்திடுங்கள்!..

No comments: