வருகிறேன்!..

மண்வாசனை நுகர்ந்து
மண்வெட்டி பிடித்து
வரப்புகளில் நடந்து
வானத்து பறவைகளை
ரசிக்க வருகிறேன்!...
என்னை தாலாட்டிய
என் மண்ணே!..
என்னை ஆளாக்கிய
என் உறவுகளே!...
உங்களை கான
உவகையோடு வருகிறேன்!.
ஆறு - குளம்
அன்பு நண்பர்களென
உங்களை பார்க்க
உறக்கமின்றி தவித்து
ஓடி வருகிறேன்!..

No comments: