என் அண்ணனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

06-09-2012
தாயோ தந்தையோ
தரணியில் நண்பனாக
சகோதரனாக வழிகாட்டியாக
சகமனிதனாக இருந்ததுண்டு!..
என்ன தவம் நான் செய்தேன்
என் அண்ணா!.. நீ எனக்கு
தாயாக தந்தையாக ஆசானாக
தடம் மாறாமல் வாழ ஒரு
நண்பனாக, அண்ணனாக கிடைத்திட!...
உன் பெயர் சொன்னால்
ஊரே புகழும் செல்வம் நீ!..
கருணை நிறைந்த காந்த
கண்ணழகன் என அறியப்பட்டவன் நீ!..
வீரத்தின் இனத்தில் பிறந்த
வீரராசனின் மகனே!.. அழியாத
புகழ் கொண்ட இளங்கோவடிகள் போல
பெயர் பெற்ற எங்கள் இளங்கோவன் நீ!..
உன்னை போல பலர் உருவாகினாலும்
உன்னிடத்தை நிரப்பிட முடியாது என
உன்னை  அறிந்தவர்களால்
ஆராதிக்கபடுபவன் நீ!..

நீ எம்மை விட்டு சென்று
ஒரு குறிஞ்சி மலர் பூத்துவிட்டது!..
எப்போதும் தோற்காத
என் அண்ணனே!.. உனது
வார்ப்பு தோற்காமல் இருக்க  என்
வாரிசாக மீண்டும் பிறந்து விடு!.. 

No comments: