ஒரு முறை

என் எண்ணங்களின் 
எழுச்சியாய்!...
என் சிந்தனைகளின் 
சிற்பமாய்!...
என் நம்பிக்கையின் 
விழுதாய்!..
என் கற்பனைகளின் 
காவியமாய்...
என் வாழ்வின் 
வெளிச்சமாய்...
என் கண்ணெதிரில் 
இருந்த உன்னை 
கவனிக்க தவறியவனின்   
கடைசி நிமிடங்களில் - அந்த 
வெட்கத்தின் நளினத்தோடு 
உன் ஒத்தை புன்னைகையோடு 
ஒரு முறை என்னை பார்த்துவிடு
முழு நிறைவோடு 
மூர்சையடைவேன்!...

No comments: