என் எண்ணங்களின்
எழுச்சியாய்!...
என் சிந்தனைகளின்
சிற்பமாய்!...
என் நம்பிக்கையின்
விழுதாய்!..
என் கற்பனைகளின்
காவியமாய்...
என் வாழ்வின்
வெளிச்சமாய்...
என் கண்ணெதிரில்
இருந்த உன்னை
கவனிக்க தவறியவனின்
கடைசி நிமிடங்களில் - அந்த
வெட்கத்தின் நளினத்தோடு
உன் ஒத்தை புன்னைகையோடு
ஒரு முறை என்னை பார்த்துவிடு
முழு நிறைவோடு
மூர்சையடைவேன்!...
No comments:
Post a Comment