தேவை மீண்டும் சுதந்திரம்

(நான் பணி புரியும் நிறுவனத்தில் வரும் சுதந்திர தினத்துக்காக நடக்க இருக்கும் "தேசப்பற்று" எனும் தலைப்பிலான கவிதை போட்டிக்கு அனுப்ப பட்ட என் கவிதை)
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?

3 comments:

தமிழ்போராளி said...

சிந்திக்க வைக்கும் வரிகள் தோழா! வெள்ளையர்களிடமிருந்த சுதந்திரத்தை கொல்லையர்களிடம் அல்லவா ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இளைஞர்களாகிய நாம் மீட்டெடுப்போம் விரைவில்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பா... தாக்கத்தின் தாகம்... அதனை அழகாய் வரிகளில் வடித்து உள்ளீர்கள்....

தாகம் தீர்க்கும் நாள் பிறக்க வேண்டும்...

அதற்கு அவர்கள் தான் பிறக்க வேண்டுமா? அதுதான் கேள்வியாய்?


வாழ்த்துகள் நண்பா...

Pinnai Ilavazhuthi said...

அவர்கள் தான் பிறக்க வேண்டும் என்பதில்லை என் நண்பா!...
ஆனால் இக்கவிதையின் தொடக்கத்தை பாருங்கள். இது என் அலுவலகத்துக்கு அனுப்பிய கவிதை அதனால் தான் அவர்களை மீண்டும் அழைத்தேன். இன்றைய நேதாஜியாக நமது மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லையா? காட்டிகுடுத்த காவாலிகளும் இனம் அறுத்த கருங்காலிகளும் வாழும் காலத்தில் நாமும் மானம் இழந்து அவசர உலகில் அடுத்தவர்களுடன் போட்டி போட்டு வாழ பழகி கொண்டோம். நன்றி என் நண்பனே!.. ஆக்கபூர்வமான கருத்துக்கும்!.. அழகிய வடிவத்தில் தொடுத்த கேள்விக்கும்