காலை பனியில் கால்தடம் பதித்து
கவலையின்றி வயல்வரப்புகளில்
நெல்மனமும் மண்மணமும் நுகர்ந்து
நெருங்கிய தோழனோடு பகிர்ந்துண்டு
பள்ளி சென்ற காலங்களும் - விடுமுறையின்
பாதிபொழுதை குளத்திலும் மீதி நேரத்தை
விளையாட்டுமாய் வாழ்ந்த நாம்
வீரம்விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா..?
அதனால் தான்
உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு...,
உள்ளத்தில் ஒரு மகிழ்வு...,
என் மண்ணை நினைத்ததும்!
(இக்கவிதைக்கான விதையை தந்த மலர்விழி அக்காவுக்கு நன்றி)
3 comments:
மண் வாசனையோடு உங்கள்கவிதை அழகாய் இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் .ஆவலோடு காத்திருந்து படிப்பேன்.
நன்றி இளவழுதி . உங்கள் கவிதை பிரமாதம் . தஞ்சை மண்ணிற்கு என்று ஒரு தனி சிறப்பு என்றுமே உண்டு . அது அந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும். எனக்கு உங்களை போல் கவிதை எழுத வராது. வாழ்த்துக்கள் .
நன்றி நிலாமதி. உங்களின் ஆசியோடு தொடர்ந்து எழுதுவேன்.
மலர் - முயற்சி செய்யுங்கள், நம் மண்ணிற்கு அந்த திறமை உண்டு.
Post a Comment