முதல் அறிமுகம்...

ஊதா நிற வானத்தில் தென்படும்
வெண்ணிற மேகங்கள் போல
பால் நிறத்தவளே!...
வெளிர்நீல புடவையில்
சங்கரன் குடியிருக்கும் ஊரினில்
செட்டிநாட்டு காரை வீட்டினுள்
கரைபுரண்ட சந்தோசத்துடன்
காளையிவனின் மனம் கவர்ந்த
காரிகையே - நீ
சின்ன சின்ன தேவதைகளுக்கு நடுவே
பேரழகியாக இன்முகத்துடன் - என்
குடும்பத்தினை வரவேற்று - உன்
குடும்பத்தினருக்கு அறிமுகபடுத்திய
நொடியினில் உன் கண்களில்
கண்ட ஆனந்தத்தில் - என் தாய்
அடைந்த பரவசத்தில் - நீ
என் தேவதைகளின் தேவதையாக
மாறிப்போனாய்!....

No comments: