தலைவனின் பிறந்தநாள்
ஆளப்பிறந்த இனத்தின்
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின் தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...
தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும் அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...
தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...
உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்
உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,.. வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின் தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...
தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும் அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...
தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...
உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்
உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,.. வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...
சகோதரி
சுகம்தானா என
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய் என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய் என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...
மாவீரர் நாள்
தறிகெட்ட எம் வாழ்வு
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள் மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள் மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...
வாழ்வு..
வசந்தத்தை வரசெய்த பெற்றோருக்கு...
சாதிக்க ஊக்கம்தந்து வாழ்வில்
உயர வைத்த சகோதரர்களுக்கு....
தனிமையை ரசிக்க பழகிய என்னை
தன்னை ரசிக்க வைத்த மனைவிக்கு....
துவண்டு வீழ்ந்த பொழுதெல்லாம்
தோள் தந்த நண்பர்களுக்கு...
நேசம் தந்து என்னை
நேசித்த சுற்றமும் உறவுகளும்...
என என் எண்ணங்களும் செயல்களும்
என்றென்றும் உங்களையே சுற்றி வந்தாலும்
விதி வசத்தால் - என் தாய்மண் தந்த
மதியை அந்நியனுக்கு அடகு வைக்கும்
அடிமை வாழ்வுக்கு பழகி - உங்களிலிருந்து
அந்நியப்பட்டு போகிறேன் ...
நிராகரிப்பு..
ஒரு முறை உன்னுடன்
உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...
ஒரு முறை உந்தன்
திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...
நேசங்களை சுவாசித்தவளே - உன்னையே
சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல்
சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
நிராகரித்தது ஏனடி - கண்ணே!...
உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...
ஒரு முறை உந்தன்
திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...
நேசங்களை சுவாசித்தவளே - உன்னையே
சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல்
சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
நிராகரித்தது ஏனடி - கண்ணே!...
அடிமை வாழ்வு
கடந்து கொண்டிருக்கும்
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஐயிரண்டு வயதினில்
மூவாறு வயதில்
முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...
மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...
நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...
கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...
எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்
பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...
இப்படி நாங்கள்
சின்னதாகவும், பெரிதாகவும்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஆட்படுத்த எங்களையே
நாங்கள் உணர்சிகளற்றவர்களாக
மாற்றி கொண்டாலும்...
படபடக்கும் டாலர் நோட்டுகளை
பார்க்கும் மாத இறுதிநாளில் - அதை
பார்க்கும் எங்களின் கண்களில் தென்படும்
பரவசத்தையும் தாண்டிய வெறுமையை
உங்களால் உணரமுடிகிறதா?
இந்த டாலர் தேசத்தில் நாங்கள்
இழந்து கொண்டிருப்பது என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?
ஐந்து வயதில்
அஆ என ஆசான் கற்றுதந்த
அறிவினை!...
ஆசையோடு கற்க ஆரம்பித்த
அறுபத்துநான்கு கலைகளை!...முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...
மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...
நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...
அள்ளி அணைத்து
அன்பு காட்டும் அண்ணன்... கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...
எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்
பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...
தயிர் சாதம், மிளகாய் வத்தல்,
தாமரை பூத்திருக்கும் குளக்கரை...
அந்தி அரட்டைக்கு ஆத்தங்கரை...
அரசியல் பேசும் பெரியவர்கள்...
அவர்களை சீண்டும் இளைஞர்கள்...
சித்திரையில் வரும் திருவிழாவா - அல்லது
சிட்டாக வரும் தாவணிகளின் விழாவா என
சிந்தை மயக்கும் ஒரு மாதகால விழா...
மழையின் மண்வாசனை; மனதை
மயக்கும் நெல்லின் வாசனை..
பச்சை வயல்வெளிகள்...
பறவைகளின் கூடுகள்...
இப்படி நாங்கள்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...
போராட்டம்....
நின்னோடு வாழ்தலே வரமென்று
வேண்டுதலோடு என் முருகனிடம்
தாரமாய் உன்னை கேட்டு
நித்தமும் தவமிருந்தேன் - என்
வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன்
தாமரையே!..
வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை
முழுமையாக புரிந்த நான்
இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?
வேண்டுதலோடு என் முருகனிடம்
தாரமாய் உன்னை கேட்டு
நித்தமும் தவமிருந்தேன் - என்
வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன்
தாமரையே!..
வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை
முழுமையாக புரிந்த நான்
இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?
அந்நிய தேச வாழ்வு...
அந்நிய தேசத்தில் ஒரு
அரைநாள் உன்னோடு வாழ்தலே
ஆயுளுக்கும் இன்பமென
நினைத்திருந்தேன் !...
ஆறு திங்கள் உன்னருகினில் வாழ
ஆண்டவன் தந்த வாய்ப்பினில்
அரை நாழிகை கூட
நீ - என்னை
அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல்
ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...
அரைநாள் உன்னோடு வாழ்தலே
ஆயுளுக்கும் இன்பமென
நினைத்திருந்தேன் !...
ஆறு திங்கள் உன்னருகினில் வாழ
ஆண்டவன் தந்த வாய்ப்பினில்
அரை நாழிகை கூட
நீ - என்னை
அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல்
ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...
கானல் நீர்!...
வார்த்தைகளில் விளையாடி- என்
எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த
தெரிந்த எனக்கு - உன்னிடம்
நேரில் பேச வார்த்தைகளின்றி
தவிக்கும் போது - நான்
வெயில் காலத்தில் தோன்றும்
கானல் நீரை போலவே
உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....
எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த
தெரிந்த எனக்கு - உன்னிடம்
நேரில் பேச வார்த்தைகளின்றி
தவிக்கும் போது - நான்
வெயில் காலத்தில் தோன்றும்
கானல் நீரை போலவே
உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....
முடிவுகள்...
இப்போதெல்லாம் அவன் தன்
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...
நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?
ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?
எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...
நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?
ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?
எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....
Subscribe to:
Posts (Atom)











