தலைவனின் பிறந்தநாள்

ஆளப்பிறந்த இனத்தின்
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின்  தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...

தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும்  அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...

தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...

உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்

உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,..  வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...

2 comments:

Rajini said...

தமிழால் தமிழனுக்கு பெருமை. உன்னால் தமிழனுக்குப் பெருமை!!

Rajini said...

தமிழால் தமிழனுக்கு பெருமை. உன்னால் தமிழுக்கு பெருமை.