மாவீரர் நாள்

தறிகெட்ட எம் வாழ்வு
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள்   மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய  தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...

1 comment:

kingofnature said...

அருமை அருமை