அதிகாரத்தை கைப்பற்றுவோம்!...

தமிழனுக்கு பிரச்சனை எனில்
தலையில் கட்டிய முண்டாசோடு
தரணி எங்கும் போரடுபவனே!...

முல்லைபெரியாறின் நம் உரிமை
முனைத்து நீ நின்றதாலே
முக்குதிக்கும் மக்களை சென்றடைந்தது!..

வாழ்வின் ஆதாரங்கள்
அழிக்கப்படும் ஸ்டேர்லைட்டின்
வழக்கு வாதத்துக்கு செல்லும்
வல்லமையுடைய வான்புகழ் தலைவா!...

மனிதாபிமானமே பெரிதென
மாற்று கட்சிகாரர்களையும்
மதிக்கும் மாசற்ற மாணிக்கமே!...

நாடாண்ட இனம் - இன்று
நாதியற்று கிடக்கிறது
நாளையை பற்றி கவலையின்றி
நாங்கள் வாழ உழைக்கும் உழைப்பாளி நீ!..

மக்கள் வாழ மாற்றமே தீர்வு
மறுமலர்ச்சி தோன்றிட - எங்கள்
மன்னவா நீயே கதி!..

சாஞ்சி போராட்டத்தில்
சரித்திரம் படைத்தவனே
சாகும் வரை உன்னை தொடர்வோம்!...

ஆணையிட்டு விட்டாய்
அண்ணன் உன் வழி நின்று
அதிகாரத்தை கைப்பற்றுவோம்!..
ஆளும் இனமாய் மாற்றி காட்டுவோம்!..

No comments: