என் கிராமம்...

( இது எனது வலைதளத்தில் 150 வது படைப்பு)


ஊருக்கு மத்தியில் தவழும்
ராஜாமட கால்வாயின் உதவியால்
முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில்  ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...     

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பா!!!

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.... இந்த ஆண்டின் முதல் பதிப்பு.. அதுவும் சிறப்பு... 150வது படைப்பு அது என்பது மேலும் தனிச்சிறப்பு...

சரியா? என்று நினைத்து பார்க்க கூட நேரம் இல்லாமல் வண்டியில் சுழலும் சக்கரமாய் அனைவரின் வாழ்க்கை...

தவறு என தெரிந்தும்... திருத்திக்கொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கி அனைவரும்...

சிந்திப்போம்...

வாழ்த்துகள்..

Pinnai Ilavazhuthi said...

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பனே!..
வாழவைத்த மண்ணை வணங்காவிட்டாலும்
வாழ்வின் பாதைக்கு வந்துகொண்டிருக்கும்
வாலிபர்களுக்கு வழி காட்டுவதுவது தானே
வாழ்வில் சாதிக்கும் பெரியவர்கள் தாம்
வாழ்ந்த மண்ணுக்கு செய்யும் மரியாதை..
வாழ்க்கையை யாரும் கேட்கவில்லை
வழி காட்டுங்கள் உங்கள் உறவுகளுக்கு..