உன்னால்.......

உன்னின் எழுத்துக்களை

பார்க்கும் பொழுதுகளில்

என்னில் எழும் உற்சாகம் …..

உன்னின் குரல்

கேட்கும் நொடிகளில்

என்னில் பரவும் சந்தோசம் …..

உன்னின் சின்ன சின்ன

செல்ல சீண்டல்களில்

என்னில் ஏற்படும் பரவசம்….

நாலெட்டு வருடங்களாய்

தவமிருந்து நறுமுகையே

உன்னை கண்டெடுத்ததன்

அர்த்தம் விளங்குதடி……

No comments: