என்னவளே....
என் தோழி என்பதா - இல்லை
என் காதலி என்பதா - இல்லை
என் மனைவி என்பதா - இல்லை
என் தாயாக வந்தவள் என்பதா -
எதுவாயினும் -
என்னில் புது மாற்றத்தை
ஏற்படுத்தியவள் - நீ...
என்னில் புது வசந்தத்தை
வர செய்தவள் நீ...
கால சூழலுக்கு
பருவ மாற்றம்
எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியமானவள்
நீ எனக்கு!....
இரவெல்லாம் நீ....
நித்திரையும் தின்று - என்
எண்ணங்களில் வாழ்கிறாய்!....
என் கண்ணம்மா!....
வரம்....
பூஜைக்கு வந்த அர்ச்சனை பூவே!...
நூறுமுறை உன்னை பிரிந்தாலும்
ஒருமுறை நம் மண்ணில் மறைந்தாலும்
மறுமுறை பிறக்கும் போது - உன்
அன்பும், நேசமும்; இதே காதலும்
வேண்டுமென்று -என்
இறைவன் முருகனிடம்
வரம் கேட்பேன்....
என்னவளின் தேடுதல்...
என் சுவாசத்துக்குரியவளாக
என் இதயத்திலிருந்து
உயிர் கசியும் கவிதை
வரசெய்தவள் - இன்னும்
என் பார்வையின் தேடுதலில்......
புதிய புதிய
எழுத்துக்களை பொங்கும்
என் அழகு தமிழில் பிரசவிக்க....
அவள் என் எழுத்துகளின் தேடுதலில்.....
உன் வாழ்வில் நான்...
வாழ்வினில் சென்றுவிடவா
இல்லை - உன்
மனக்காயங்களுக்கு மருந்திடும்
மனாளனாக வந்துவிடவா?
காதல்....
உலகத்து கவிகள் எல்லாம்
உன்னை பற்றி
ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்
பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட
அந்த கவிகளிடம் ஒவ்வொரு
எழுத்து இரவல் வாங்கி
உன்னை பற்றி ஒரு
வரி எழுதுகிறேன் - காதலே
நீ காற்றை போல !....
உன் நினைவுகள்….
துடிக்கும்
இதயம் கூட
விடாமல்
துடிக்கும் - உன்னை
நினைத்து விட்டால்!....
உன் புன்னகை...
ஒரு பார்வை
பார்த்து
உதட்டோரம்
சிறு புன்னகை
சிந்தி சென்று
விடுகிறாய் - நீ!...
அம்மாவின்
கைபிடித்து செல்லும்
குழந்தை போல
உன்னையே
தொடர்ந்து வருகிறது
என் மனது!....
செவ்விதழாளே!...
அடிக்கடி
நீ கொள்ளும் கோபத்தை
அன்றும் என் மீது
காட்டினாய் நீ!..
உன் பொய் கோபத்தை
ரசித்தபடி,
என் விரல்களுடன்
விளையாட...
அலை போன்ற
வளைந்து நெளிந்து
செல்லும் உன்
கூந்தலுக்கு
குடுப்பினை இல்லையோ
என கூறியதும் -
என்னை தவிர
வேறு ஒரு கேசத்தை
தொட்டுவிடுமா
உன் விரல்கள்
என செல்லமாக
என்னை அடிக்க
வரும் என் தேவதையைய்
அப்படியே அள்ளி
அணைத்துக்கொள்கிறேன் நான்!
கோபம்....
நேரங்களில்
என்னிடம்
சொல்ல மறந்து நீ
அலுவலகம் விட்டு
செல்லும் சில
நாட்களில்
என்னில் எழும்
கோபம் - உன்
திருமுகமதனை
பார்த்த நொடியில்....
காலை பொழுதினில்...
கடற்கரை மணல்வெளியில்....
காற்றோடு களைந்து...
கவிதை பாடும் - உன்
கூந்தலை போல
கலைந்து விடுகிறது!...
சிந்திக்க வைத்தவளே...
தொட்டுவிட்டதாக
பாராட்டுபவர்களுக்கு
தெரியுமா...
என்னை -
சிந்திக்க
வைத்தவளே
நீ தான்
என்று!....
நீ.....
கடைக்கு சென்றபோது
உனக்கு என்ன
வேணும் என
கேட்ட
என் அப்பாவிடன்
உன்னை நோக்கி
கை காட்ட
நாணத்தால் சிவந்து
பொம்மைகளுடன்
பொம்மையாக
மாறிப்போனாய் - நீ!...
உன் கொளுசுகளின் ஓசை....
நட்சத்திரமே...
எல்லாம் உனக்குள்
வைத்துக்கொண்டாயோ?....
நீ
சிரிக்கும் போது
அத்தனை
நட்சத்திரங்களும்
ஒளி(உதி)ர்கின்றனவே!...
யாதுமாகாமல் போனவளே!....

உன்னுடன் இணைந்து உணவருந்தும் போது...
உன்னுடன் இணைந்து தேநீர் அருந்தும் போது...
உன்னுடன் இணைந்து கடைதெரு செல்லும் போது...
உன்னுடன் இணைந்து பணிபுரியும் போது...
உன்னுடன் இணைந்து பயணிக்கும் போது...
உன்னுடைய கால் கொலுசு சிணுங்கும் போது...
உனது சின்ன சின்ன சில்மிசங்களை காணும் போதும்...
வரம்பு மீறாத வாய் சண்டைகளும் ...
எல்லை மீறாத சீண்டல்களும் - நீ
எனது காதலியாக வில்லையே
என்ற ஏக்கத்தை விட - நீ
எனது மனைவியாக வில்லையே
என்ற வருத்தம் தான் மேலோங்கி நிற்கிறது !....
வீ. இளவழுதி
ஆளும் திறன்....
எனக்குள் எல்லோரையும் போல வந்தாய்
எனக்கானவளாக மெள்ள மாறிப்போனாய் - நீ
என் காதலியாகவும் இருந்தது இல்லை - இன்று
என் வாழ்க்கை துணையாகவும் இல்லை - ஆயினும்
என்னை ஆட்சி செய்யும் லாவண்யத்தை
எங்கிருந்து கற்று வந்தாய் - கண்ணம்மா!......
- வீ. இளவழுதி
காதலை யாசிக்கிறேன்....
கல்லூரி வந்த புதிதில்
களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்
சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...
கிடைத்த தருணங்களில் ...
பரிமாறிக்கொண்ட தகவல்களில்...
ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்
ஏதோ ஒரு தருணத்தில்
ஏதோ ஒரு கணத்தில் ...
நீ எனக்குள் காதலியாக
எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..
இத்தனை நாளாக சொல்லாத காதலை
கல்லூரியின் கடைசி நாளிலும்
சொல்லாமல் செல்லலாம் தான் -
ஆனால் பின்னாளில் ஒரு நாள் - நீ
என் முன்னால் வந்து
அன்றே சொல்லி இருந்தால்
உன்னை ஆராதித்திருப்பேனே
என சொன்னால் ....
தூண்டிலிட்ட புழுவாய்
துடித்தல்லவா போகுமென்மனம்
எனவே தான் உன்னை
தொலைத்து விடாமலிருக்க
உனக்குள்ளிருக்கும்
காதலையும் யாசிக்கிறேனடி !....
--வீ.இளவழுதி.
என் உள்ளுயிர்
பத்தோடு பதினொன்றல்ல - நான்
தனித்துவமானவன்
என்பதால் தானோ - உன்
புன்னகையை - எனக்கு
பொன்னகையாக்கி
புத்தொளி பெறச்செய்தாய்!...
பின் ஏனடி என்னை
பிரிந்து சென்று உள்ளுயிர்
பறித்து சென்றாய்!...
வழிப்போக்கனின் வார்த்தைகள்...
தமிழ் போல என்னுள்
தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...
தன்னை பற்றி மட்டுமே
தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்
தாயைப்போல மற்றவர்களும்
தழைத்து வாழ வேண்டுமென
தவமிருப்பவளே!....
சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்
சொல்ல இயலாதவையும் சில உண்டு
இன்று - நானும்
உனக்கு ஆறுதல் சொல்ல
இயலாதவனாகவே உள்ளேன்!...
ஆயிரமாயிரம் பேர்
வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து
உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்
உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ
தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை
அரவணைத்து தூக்கி விடும் -
அந்த தோழமையில் - நீ
அனைத்தையும் மறக்க வேண்டும்
புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;
சாதனைகள் நீ படைத்திட வேண்டும்
சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்
வார்த்தைகளை கோர்த்து உனக்கு
ஆறுதல் சொல்வதை விட
என் தோள் சாய்த்து அரவணைத்து
அழைத்து செல்லும் நட்பாக
இருக்க விரும்புவதால் சொல்கிறேன்
கவலை - நீ மறந்து ;
கணினியில் கரை கண்டிட
காலம் உன்னை போற்றிட
புதிய அத்தியாயம் - நீ படைத்திட
ஆறுதல் சொல்ல வந்த
வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...
- வீ. இளவழுதி