ரயில் பயணத்தில்
சன்னலோர இருக்கையில் அமர்ந்து -
சலனமில்லா என் மனம் இயற்கையை
ரசித்து வருகையில்..... இடையில்
ஏதோ ஒரு சலனம் - என
சற்றே தலைதிருப்ப
தொட்டுவிடும் தூரத்தில் - என்
எதிரில் அமர்ந்திருந்தாய்...
என் வாழ்வே இயற்கையைபோல
இங்கிருக்க எதைதேடி
இத்தனை நாளாய் அலைந்தேன் - என
என்னுள் இறுமாப்பு கொண்டு
எனக்கு கிடைத்த வாய்ப்பில்
என் காதலை உன்னிடம் சொல்ல...
என்ன காரணத்தாலோ
உன் கண்ணிலிருந்த காதலை
கடைசி வரை என்னிடம் சொல்லாமலே
சென்றதேன் கண்மணி.....
--வீ.இளவழுதி
வரம் தருவாயா அண்ணா...
உயிராய் உன்னை ஒரு முறை
பார்க்க ஆசை
உடன் பிறந்தவனே வருவாயா ....
வரம் தருவாயா ....
அண்ணா...
நிகழ்கால வாழ்வானாலும்
சாதனைகளே உன்
கற்பனையில் ஊறி
வாழ்வை வென்றாய்;
சாவை மட்டும் ஏன்
சாகடிக்க மறந்தாய்?
என் அண்ணா....
முதல் பார்வை
நானாக இருப்பேனோ
என்றும் தெரியாமல் ;
நான் தானா
என்றும் புரியாமல் ;
உன் வாழ்வில்
மறக்க இயலா
மங்கள நாளில்…
மலங்க மலங்க
முழித்து - நீ
பார்த்த அந்த - ஒரு
பார்வையை என்
வாழ்நாள் முழுக்க
மறக்க இயலாது தோழி.....
முதல் தரிசனம்....
மூன்றாண்டுகள் என் குரல்
மட்டும் கேட்டவள் - இன்று
முதல் முறையாக - என்
முழு உருவ தரிசனம் காண்கிறாள்;
முழுதாய் ஒரு வார்த்தை
பேச இயலாமல் ...
என் பயணங்கள்....
நெஞ்சமெல்லாம் உன்னை பற்றிய
எதிர்பார்ப்புகளும்.....
சிந்தனை எல்லாம் உன்
நினைவுகளுமாக....
தொடர்கிறது என் பயணங்கள்....
--வீ. இளவழுதி
உன்னால்.....
பழனியில் கண்டுபிடித்தார் முருக பெருமான்;
காணாமல் போன தனது ஆட்டை
ஆயிரமாயிரம் ஆடுகளுக்கு மத்தியில்
கண்டுபிடித்தார் ஏசு பெருமான்;
லட்சத்தி லட்சம் பெண்களில்
உன்னை மட்டும் கண்டு பிடித்தேன் - நான்;
இந்த வகையில் நானும் அவர்களுக்கு
சமமாகிறேன் - உன்னால் .....
இந்த ஒரு நொடிக்காக...
உறக்கம் வரவில்லை;
உறக்கம் வந்தாலும்
கனவு வருவதில்லை;
கனவு வரும்போதிலும் – அதில்
கண்மணி நீ வருவதில்லை – என
மன உளைச்சலில் மருகி;
அதிகாலையில் உறங்கி ;
தாமதமாய் எழுந்து;
அவசரகதியில் இயங்கி;
நெருசலில் சிக்கி;
வியர்வையில் நனைந்து;
மனம் வெறுத்து
அலுவலகம் நுழைகையில்
அருகினில் உன் தரிசனம்;
எல்லாம் மறந்து
ஒரு நிமிடம்
மனம் லேசாகிறது
புதிதாய் பிறந்ததாய்
என்னி மனம் கூதுகளிக்கிறது...
இந்த ஒரு நொடிக்காக...
இது போல ஓராயிரம்
இன்னல்களை கடந்து வரலாம்....
-- வீ. இளவழுதி
தேவதையின் தரிசனம்...
காற்றில் உந்தன்
குரல் கேட்டு
கற்பனையில் உயிர்
வளர்த்து - உன்னை
காணும் தருணத்திற்காக
வரம் வேண்டி...
இறைவன் சன்னதியில்
காத்திருக்க.....
வரம் தரும் அம்மனாக
வந்தாய் என்னருகில்...
வார்த்தைகளில் வர்ணம்பூசி
வரவழைத்தவன்- உன்னை
கண்ட தருணத்தில்
வாயடைத்து நிற்கிறேன்- பேச
வார்த்தைகளின்றி!....
-வீ. இளவழுதி, பின்னையூர்
முதல் கவிதை..
என்னின் முதல் கவிதை
உன்னின் கோபத்தி(தீயி)ல்
கருகிய போதும்
என்னிலிருந்து
கவிதைகள் பல பல
காற்றினிலே கலந்து
வருகின்றன – வசந்தமே
வாசிக்க நீயின்றி...
-- வீ.இளவழுதி
சாரல்....

கண்களுக்கு காவியம் நீ...
செவிகளுக்கு இன்னிசை நீ ...
நாவிற்கு அறுசுவை நீ ...
மார்கழியின் மறுவடிவம் நீ...
சித்திரையின் எதிர்பதம் நீ...
இயற்கையின் வரம் நீ...
எங்களின் தவம் நீ...
மலைகளின் கூந்தல் நீ...
மனைவியை மறக்கச்செய்பவலும் நீ ...
மழையின் மகத்துவம் நீ ...
அருவியின் அற்புதம் நீ...
சாரலின் அழகு ....
மலையிலா? .. அருவியிலா?
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
சாரலே...
நீ தான் அழகு....
--வீ.இளவழுதி
கரம் பிடிப்பேன் கண்மணி...
என்றென்றும் காத்திருக்கும் ....
உன்னை தீண்டாவிடிலும்
உன்
இதயத்தின் ஓரத்தில்
உன்னையும் அறியாமல்
ஒட்டியிருக்கும் -
என் பிம்பம்
என்றாவது கஷ்டப்படும்
நொடியில் நீ
தோள் சாய்ந்து இளைப்பாற
என்றென்றும் காத்திருக்கும் ....
--வீ.இளவழுதி
அப்பா...
கலைந்து போன கனவுகள்
காலத்தின் கட்டாயத்தால் - நீ
என்
கரம் பிடிக்கும் நாழிகை
காற்றோடு கலந்து விட்டாலும்
காரிகையே ...
கடக்க இருக்கும் காலங்களில் - உன்
வாழ்வில் வசந்தங்கள் சேர்க்க
வண்ணத்து பூச்சியாக உன்
வாசல் வந்து சேர்ந்திடுவேன்
நீ ...
மகிழ்வின் எல்லை சென்றிட
உன் மகளோ மகனோ
நம் எண்ணங்களுக்கு
உருவம் தந்து உயர்ந்திட
ஒவ்வொரு கணமும் - என்
முருகனை பிரார்த்தித்துக்கொண்டிருப்பேன்
கண்மணி ...
--வீ. இளவழுதி
நமது வாழ்வு ...
உன்னின் ஒவ்வொரு
நொடியிலும் - உடனிருந்து
உனது வெற்றிகளுக்கெல்லாம்
ஊன்றுகோளாக இருந்து
உன்னை உற்சாகப்படுத்திடவேண்டும்
என்னவளின் திருக்கரங்களால்
எண்ணற்ற வெற்றி மாலைகள்
என் தோள்களை
அலங்கரிக்க வேண்டும்
இயற்கையின் அழகினை
இயன்றவரை உன்னுடன்
இருந்து இன்புற்று
ரசித்திட வேண்டும்
இப்படி எண்ணற்ற
ஆசைகளை என்னுள்
சுமந்து திரிகின்றேன்
என்னவளே
என்று நிஜமாகும்
நமது கனவுகள்....
-- வீ. இளவழுதி




