பார்வை....

நெருப்பின்றி பற்றுகிறதே...
ஓ..! - நீ
நெருங்கி பார்ப்பதாலா....  

அந்நிய தேசமும் ... அவளும்...

உறைய வைக்கும் குளிரில்
உன் மண்ணில் கால் பதித்தேன்
உயிரில் கலந்தவள் நேசித்த பூமி என
உன்னில் கலந்திட்டேன் நொடி பொழுதில்...

நாட்கள் மெல்ல நகர்ந்தன
நரகமாய் என் பொழுதுகள் சென்றன
நரம்புக்குள் ஊடுருவிய குளிரில்
நகர மறுத்தன கால்கள்..

என்னோடு கலந்தவள்
தன் உறவுகளுக்காக  
என்னை தூக்கிஎறிந்தது போல
உன்னை என்னால் உதறிவிட
இயலாமல் பரிதவித்து நிற்கின்றேன்...

வசந்த காலம் என் வாழ்வினில்
வராமல் போகலாம் - ஆனால்
வந்தே தீரும் உன் மண்ணில்...
வாசலில் நின்று காத்திருக்கிறேன்
வருகைக்காக... 

கேள்வி

மனதின் வலி மற்றவர்களுக்கு
தெரியாமல் வாழ்வதே
வாழ்வாய் மாறி போனதேன்?...

நினைவுகள்....

நீ வேண்டாமென ஒதுங்கி வாழ்ந்தாலும்...
நெடுந்தூரம் ஓடி தொலைதூரத்தில் இருந்தாலும்....
ஆயிளுக்கும் உன் முகம் காணமுடியா சாபமிருந்தாலும்....
அடிமனசில் இன்னும் சிம்மாசனமிட்டு என்னை
அவஸ்தை பட வைப்பதேனோ கண்மணி?....

சேரா உறவு..

ஒருமுறை உந்தன் குரலொலி ஒலித்திருந்தால்
ஓயாத அலையாய் உன் வாழ்வில் கலந்து
ஒன்றாகியிருபோம் ....


முன்னரே என் கண்ணில் விழுந்திருந்தால்
மூவுலகுக்கும் என் முதலாய் நீ
முன்னிருந்திருப்பாய்...


கண்ணிலிருந்து வரும் காந்த சக்தி
காண கிடைத்திருந்தால் நமக்கான வாழ்வு
கானல்நீராகியிருக்காதோ....


அழகான சிரிப்பில் அடிமனசை வருடுபவளே
அன்றே என் முன்னால் வராமல் - என்றும் என்னை
அனாதையாக்கியதேன்...



அலைபேசி உரையாடல்....

குறிஞ்சி மலர் மலரும் போது
குதித்து கும்மாளமிட  துடிக்கும் மனது...
பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூப்பதால் ...
பரவசப்பட்டு பனிப்புயலில் குதிக்கும் அணிலாய் - என்
மனம் கூதுகளிக்கிறது - உன்னோடு மீண்டும்
மனம்விட்டு பேசியது - பன்னிரண்டு  ஆண்டுகள்  கடந்து....

எம். ராமசந்திரன் (MR)


மாசில்லா மாணிக்கம்
பெற்றெடுத்த எங்கள்
ஈடில்லா ராமனே!...
எம் மண்ணின் மைந்தனே!...
பின்னையின் முதல்வனே!...
வாழிய நீவிர் பல்லாண்டு!..

எம்மார் (எ) எம். ராமசந்திரன் Ex. MLA

பதவிக்கு வந்து பத்துநாளில் பகட்டாக
பவனி வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்...
கால் நூற்றாண்டு அரசியலில் - இன்றும்
கறைபடியா கரங்களுடன் வலம் வருகிறாய்!...
இருமுறை சட்டமன்ற உறுப்பினராய் இருந்தும்
இன்றும் எங்களுக்காக புல்லட்டில் பயணிக்கிறா...ய்!....
கட்சி பேதங்களை கடந்து தொகுதியின்
கடைசி நிலை மனிதன் வரை
சாதி மதம் பார்க்காமல் - உன்னில்
சரிபாதியாய் எண்ணி...
சடங்கு சம்பிரதாயங்களை ...
துக்க சந்தோசங்களை ...
உமதாக நினைத்து முதல்வனாய் - நீ முன்னின்று
உரிமையுடன் இன்றும் செய்து வருகின்றாய்!.....
அரசியலை எமக்கு கற்றுத்தந்த - எங்கள்
ஆசானே!... உன் அரிசுவடி பற்றி என்றும்
உங்கள் வழியில் பயணிப்போம்!...

திருமண நாள்

எனக்கான எல்லா கஷ்டங்களையும்
உனக்கானது என ஏற்று கொண்டு
என் ஆயுளாக வந்தவளே!..
என் தாயாக மாறியவளே!...
உன்னோடு சேர்ந்து வாழ்ந்ததை  விட
இந்த  ஐடி அடிமை வாழ்வினால்
பிரிந்து வாழ்ந்த நாள்களே அதிகம்!...
இதோ வழக்கம் போல - இன்று நம்
திருமண நாளிலும் பிரிந்தே வாழ்கின்றோம்
என் வாழ்வில் மறுமலர்ச்சியை தந்தவளே!...
என் தலைவனை போல பம்பரமாய்
என்றும் நமது குடும்பத்துக்காக உழைப்பவளே!... 
இனியும் நமக்கு   இந்த இன்னல்  வாழ்வு
இருக்காது அன்பே!.. இதோ....
இன்னல் மறைந்து நமக்கான வாழ்வில் 
இளஞ்சூரியனாய் புது உதயம் பிறக்கிறது...
இந்த மணநாள் முதல்....
என் வாழ்வின் மகாராணியே...
எனது வாழ்வில் நீ வந்த  இந்த நாளுக்கும்
என் வாழ்வாய் அமைந்த உனக்கும்
எனது நன்றிகள்.... 

கவனிப்பு...

உன்னை பிரிந்து வாழும் நிர்ப்பந்தம்
உலகில் எனக்கு வாய்க்க பெற்றாலும்
உன்னிப்பாக என்னை கவனிக்கிறாய் - நம்
உறவை வளர்த்த என் கவிதைகளால்.....  

இதயத்தில் நான்!...

இருவார இடைவெளியில்
இருவரி என்னிடம் பேசினாய்
இறுமாப்பு கொண்டேன்
இந்த உலகில் -  ஆம்
இன்னும் என்னவளின்
இதயத்தில் நான்!...  

உணர்கிறேன்....

உன்னோடு பயணித்த போது உணராதது...
உன்னோடு வாழ்ந்த போது உணராதது ....
உன்னை பிரிந்த இந்த ஒரு வாரத்தில்
உயிர் போகும் என் வலியில் உணர்கிறேன்!... 

மரணிக்கும்....

உன்னோடு வாழும் வாய்ப்பு
இருக்குமா தெரியவில்லை - ஆனால்
உன்னோடு மரணிக்கும் வாய்ப்பு
இருக்கிறது என் காதலுக்கு!... 

என் காதல்...

உன்னோடு பேசுவது ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயுள் வாழ்ந்தது போன்ற நிம்மதி தந்தவளே
ஒரேயடியாக என்னை வஞ்சித்து என் காதலை
உன்னோடு எடுத்து சென்றவளே !... -பத்திரமாக  பார்த்துகொள்
உன்னோடு வரும் என் காதலை மட்டுமாவது !... 

விட்டு விடுகிறேன்

உன்னை விட்டு  விடுகிறேன் - அன்பே...
உன்னோடு என் காதலையும் - அது
உன் வாழ்கையில் தடுமாறும் போது
உன்னை பத்திரமாக வழி நடத்தும்....
 

சுயநலவாதி...

சுயநலவாதி என நீ கூறியபோது
சுடவில்லையடி என் மனது - உனக்காகவே
சுடர்விடும் என் வாழ்வு - உன்னையே
சுற்றி வருவதால் கண்ணே!... 

பாவம்...

நீ நலம் வாழ நித்தம் தவமிருந்தேன்
    காலம்  செலுத்திய வழியில் - நானே
நின் வாழ்வின் பெரும் பாவமாய்
    காட்சி பொருளாய் மாறிப்போனதேன்?

முதல் முத்தம்!...

அவசரத்தில் அள்ளி நான் அணைக்க
அச்சத்தில் நீ  தவிக்க!.. - உன்
முந்தானை என் தோளில் துண்டு ஆக
முத்தங்களால் நாம் எச்சமானோம்!!...
முதல் முறையாய்  மொத்தமாய்
முழு உலகை ஒன்றாய் ரசிக்கிறோம்!!!...  

அலங்காரம்!...


சின்ன சின்னதாய்
சிக்கனமாய் உன்னை
அலங்கரித்து கொள்கிறாய் - நீ!..
சின்னா பின்னமாய்
சிதறிப்போகிறேன் நான்!...  

உயிர்!...

ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்து
உயிர் பெற்று வந்தவளோ நீ!...