வெற்றிடம்...
கனவுகளின் தேவதையே!...
நடத்திய கனவு கண்ணாம்பூச்சியில்
நீண்ட உன் கரிய கூந்தலுடன்
கண்மையிட்ட காந்த கண்களுடன்
ஆப்பிள் பழ கன்னத்துடன்
முத்தரிசி பல்வரிசையுடன்
செர்ரிபழ உதடுகளால்
உன் சின்ன சிரிப்பில்
என் செல்ல மனசை
கொள்ளை கொண்டவளே!...
நேரில்!..
என்னருகில் நீயிருந்த
இந்த இருநாட்களும்
இரண்டு ஆயுள் வாழ்ந்த
இன்பம் இருக்குதடி!...
உன்னருகில் நான்...
எல்லோரையும் அரவணைத்து - நீ
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை
இருக்க செய்பவளே!... - ஒரு
நாழிகை உன்னருகில்
நானிருந்தால்...
ஒரு யுகம் வாழ்ந்த
அர்த்தம் கிடைக்குதடி!...
மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..
மீண்டு(ம்) வருவான்!...
வாய்ப்பு...
உன் பொற்பாதங்களில்
தவழும் முத்தழகு கொலுசாக
வாழ்வின் இறுதிவரை
வந்திடும் வாய்ப்புதனை
தந்திடுவாயா
கோபம்..
வெல்வோம் தமிழீழம்...
ஒவ்வொருவரும் ஓரனியில்
எம்மின அடையாளமே!...
எங்களின்தலைவனே!...
உன் அடி பற்றி
உன் தலைமையில்
மாவீரர் தின சபதமேற்று
நம்மின தாகம் தீர்க்க
நம் மண்ணை மீட்டெடுக்க
மீண்டும் அணிதிரள்வோம்
பகைவர் படை அகற்றி
வஞ்சகர் முகம் கிழிக்க
தலைவனின் வழிகாட்டுதலில்
புலியாய் புறப்படுவோம்.....
தமிழீழம் வெல்வோம்....
தரணியில் தலை நிமிர்வோம்!...
உன்னால் மட்டும்..
என் சுவாசம்...
என் எண்ணங்களாய் அமைந்தவள்...
காந்த கண்கள்
சுகமாக வருடவரும்
கருமேக கூந்தல் - என
என் எண்ணங்களாக
எனக்கமைந்த
என்னவள் தன்
விருப்பமென சொன்னவை
எல்லாமே என்
விருப்பமாய் இருந்தது
இதை விட வேறென்ன
வேண்டுமெனக்கு!...
முதல் அறிமுகம்...
வெண்ணிற மேகங்கள் போல
பால் நிறத்தவளே!...
வெளிர்நீல புடவையில்
சங்கரன் குடியிருக்கும் ஊரினில்
செட்டிநாட்டு காரை வீட்டினுள்
கரைபுரண்ட சந்தோசத்துடன்
காளையிவனின் மனம் கவர்ந்த
காரிகையே - நீ
சின்ன சின்ன தேவதைகளுக்கு நடுவே
பேரழகியாக இன்முகத்துடன் - என்
குடும்பத்தினை வரவேற்று - உன்
குடும்பத்தினருக்கு அறிமுகபடுத்திய
நொடியினில் உன் கண்களில்
கண்ட ஆனந்தத்தில் - என் தாய்
அடைந்த பரவசத்தில் - நீ
என் தேவதைகளின் தேவதையாக
மாறிப்போனாய்!....
எனக்கானவள்....
ஏமாற்றம்...
சிந்தனைகளிலும் - நீ
இருந்ததினால் - என்
வாழ்வாய் வருவாய் என
எண்ணி இறுமாப்பு
கொண்டிருந்தேன்!...
என் எதிர்படும்
நேரங்களில் எல்லாம்
உன் உதட்டோர
புன்னகையால்
என்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுதி
என் வாழ்வின்
பரிணாமத்திற்கு வித்திட்டாய்
என் மார்தட்டி
மகிழ்ந்திருந்தேன்!...
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஏதோ ஒரு பொழுதினில்
ஏழிரண்டு மாதங்களாய்
என்னில் வசந்தத்தை
வரசெய்தவளே!...
உன் வாசல் வந்து
என் காதல்தனை சொல்ல
எத்தனித்த வேளையில்
அருகினில் இருந்தவனை
அழைத்து - என் காதலன் என
அறிமுகபடுத்திய நொடியினில்
கல் பட்ட கண்ணாடி
போலானதடி - உன்னை
சுமந்திருக்கும் என இதயம்!.....
என்னவள்...
எல்லாமும் நீயாய்....
என் தாயிடம் கண்ட
பாசமும் அரவனைப்பும்
என் தந்தையிடம் கண்ட
வழிகாட்டுதலும் கண்டிப்பும்
என் சகோதரனிடம் கண்ட
அன்பும் அக்கறையும்
என் நண்பர்களிடம் கண்ட
ஒற்றுமையும் உதவிகளும்
உன் ஒருத்தியால்
எனக்கு தர இயலுகிறதே
என்பதை என்னும் போது
என்னின் எல்லாமுமாக
நீயே தோன்றுகிறாய்!....
என் மோகனமே!....
உன்னால்.......
உன்னின் எழுத்துக்களை
பார்க்கும் பொழுதுகளில்
என்னில் எழும் உற்சாகம் …..
உன்னின் குரல்
கேட்கும் நொடிகளில்
என்னில் பரவும் சந்தோசம் …..
உன்னின் சின்ன சின்ன
செல்ல சீண்டல்களில்
என்னில் ஏற்படும் பரவசம்….
நாலெட்டு வருடங்களாய்
தவமிருந்து நறுமுகையே
உன்னை கண்டெடுத்ததன்
அர்த்தம் விளங்குதடி……
கைபிடித்து வருவாயா
கண் கொண்டு பாராமல்
காரணம் யாதுமில்லாமல்
காற்றினில் மிதக்க விட்டாய் – என் மனதினை.....
காலமெல்லாம் இந்த சந்தோசம்
கிடைக்க கண்மணியே - என்
கைபிடித்து வருவாயா
காற்றில் என் இறுதி
மூச்சு இருக்கும் மட்டும் …….
என் கவிதைகளின் நாயகி
வெற்று பக்கங்களாய்
இருந்த என்
வாழ்வு புத்தகத்தின்
மொத்த பக்கங்களையும் – தன்
அன்பாலும் பாசத்தாலும்
காதலாலும் வாசமுள்ள
வசந்தமான வாசிக்க
இயன்ற புத்தகமாக
மாற்றி அமைத்தவள் இனி வரும் என்
கவிதைகளின் கர்ப்பக விருச்சம்!...
வராமல் போனாயோ...
லயிக்கவைக்கும் அழகில்
தினமும் வந்து என்னை
மானசிகமாக வாழ்த்தி
லாவகமான வார்த்தைகளால்
தினமும் என் இதயம்
வருடியவளே - என் வாழ்வின் வழித்தடம்
முழுமையாய் காட்டியவளே
இறுதி வரை என்னுடன் வராமல் போனதேன்?
