பூஜை...
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....
காதலே உன்னை ஆராதிக்கிறேன்....
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....
என்னவளின் பிறந்த நாள்
ஏமாற்றமே வாழ்வு என்றிந்தவனை
என்னவளாக நீ வந்து
எல்லாரையும் அன்பால் அனுசரித்து
ஏற்றமிகு வாழ்வு வாழவைத்தாய்
ஆனாலும்
ஏமாற்றம் இன்னும் நம்மை
ஏமாற்றவே செய்கிறது செல்லமே
என் பிறந்த நாள்
உன் பிறந்த நாள்
நம் திருமண நாள்
புத்தாண்டின் முதல் நாள்
என நமக்கான
முதல் ஆண்டின்
முக்கிய நாட்களில் - உன்
முகம் காண இயலாமல்
முன்னாளில் வாழ்ந்தது போல
இந்நாளிலும் வாழவேண்டிய நிர்பந்தம்
வலிகளை தாங்கி
வாழ பழகியவளே - உன்
வாழ்வின் துணைவனின்றி
வர இருக்கும்
இந்த பிறந்த நாளில்
நமது முருகனின் அருளோடு
வசந்தத்துடன் வாழ்ந்திட
பாசத்துடன் வாழ்த்துகிறேனடி
என் பிறந்த நாள்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்
மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...
ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி
உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை
யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்
அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
மறக்கத்தான் நினைக்கிறேன்...
மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.
தேவை மீண்டும் சுதந்திரம்
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?
தேவதைக்கான கனவு...
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்
என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு
என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி
இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...
என் காதலியே!..
என் தோழியே!...
என் தோழியே!...
என் நட்புக்கு அடித்தளமிட்டவளே...
என்னையும் சாதிக்க தூண்டியவளே!...
என் எழுத்துக்களின் விருச்சமாய் அமைந்தவளே!...
என்னையே எனக்கு புதிதாய் தந்தவளே! ...
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
தந்த அலுவலகத்தில் - நீ
என்னை கடந்து சென்ற சந்தர்ப்பத்தில்
என்னையே எனக்கு மீட்டு தந்த - உன்
ஒத்தை சிரிப்பு கூட கிடைக்காத தருணத்தில்
என் ஒத்தை இதயத்தை
ஓராயிரம் பேர் சம்மட்டியால்
ஓங்கி அடித்தது போல
ஒரு வலி தந்ததேனடி?.........
அறியா காரணம்
மங்கிய வெளிச்சத்தில்
மஞ்சள் நிறத்தவளே! - உன்
கொஞ்சும் புன்னகையில்!.. - என்னை
கொள்ளை கொண்டவளே!...
அர்ச்சுனனின் வில்லை ஞாபகப்படுத்தும்
உதட்டினை உடையவளே!...
உன் மனதை போன்ற
வெள்ளை முத்தரிசி பற்கள்!..
அடர்ந்த புருவங்கள்
அந்த காந்த கண்கள்
பீன்ஸ் விரல்கள்
அறைநிலவாய் நகங்கள்
அமைதியான அர்த்தமான
ஆர்ப்பட்டமில்லா அன்பு வார்த்தைகளை
வெளிப்படுத்தும் குணம்
இன்னும் இன்னும்
உன்னிடம் நான்
கட்டுண்டதற்க்கான
காரணம்.. ஏராளம்
ஆனால்
காரணம் ஒன்று சொல்லடி
என் கண்ணே
என் காதலை உதறியதற்க்கு!
உன்னோடு...
உன் பாசத்தை நீ கொடுத்தால்
உன் அருகாமையை எனக்கு உணர்த்தினால்
உன் அன்பினை அள்ளி தந்தால்
உன் கையால் உணவருந்தினால்
உன் கண்களில் உலகினை கண்டால்
உன்னுடன் வீதிகளில் உலா வந்தால்
உன்னுடன் நம் உறவுகளை சந்தித்தால்
உனக்காக நான் துடிக்க அனுமதித்தால்
உனக்காக என்னையே அர்ப்பணிக்கவிட்டால்
அந்த நாள் அந்த பொழுது
இந்த உலகில் நான் உச்சம் அடைவேனடி!....
நாள் எதுவோ?
எனக்கு மட்டும் பிரியமானவளே!...
மையிட்ட உன் காந்த கண்களா - என்
மாலையினை தாங்கபோகும் உன் தோள்களா
மையல் கொள்ளும் உன் அன்னநடையா
மனதை மயக்கும் உன் மந்திர பேச்சா
கொடியிடை குயிலே!.. என்னை
கொள்ளை கொண்ட மயிலே!...
உலகத்து அழகினை எல்லாம் - நான்
உன்னிடமிருந்து ரசிக்கப்போகும் நாள் எதுவோ?
என் காதலியே!..
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும்
காவியம் படைத்திடுவேன் - உன்
கண் அசைவு கிடைத்து விட்டால்
காலத்தையும் மாற்றி அமைப்பேன்
அம்மா...
அய்யிரண்டு மாதம் என்னை
ஆசையோடு வயிற்றில் சுமந்தாய்...
அய்யாறு வருடம் என்னை
அன்போடு நெஞ்சில் சுமக்கிறாய்...
நவீன வசதிகள் இல்லாத கிராமத்தில்
நாகரிகமாய் எம்மை வளர்த்தாய்....
படுக்கை வசதிக்காக - உன் துணிகளையே
படுக்கையாய் எமக்கு மாற்றி தந்தாய்....
படிப்பறிவில்லாத நீ உன் பிள்ளைகளை
பட்டபடிப்புக்கு அனுப்பி தீருவேன் - என
சபதமேற்றாய்.... சத்தியம் செய்தாய்....
சற்றும் ஓய்வின்றி உன்
ஆயுளை எமக்காய் அர்ப்பணித்தாய் - உன்
ஆசைகளை எங்களுக்காய் புறந்தள்ளினாய் ....
என்ன தவம் யாம் செய்தோம்
எம் அன்னையாய் உன்னை பெற!..
என்ன செய்து எம் கடன் அடைப்போம்
உன் ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர!....
திருமண அழைப்பிதல்..
வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...
எங்களையும் மணமுள்ள மலராக்கும்
எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே...
எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...
குதுகலமூட்டும் இந்த நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்!
ஆம்! இந்த காலை பொழுதில் ஆரம்பமாகிறது
உங்கள் நட்புகள் -
நாங்கள் இருகரம் பற்றும் இல்லறத் தொடக்கவிழா !
இந்த நாளில் உங்களின் வருகைக்காகவும் வாழ்த்துதலுக்காகவும்
ஒரத்தநாடு LGVK திருமண மண்டபத்தில் - மணவறையில்
வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்
எங்களை வாழ்த்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீங்களும் ஒருவர் என எண்ணி அகமகிழ்கிறோம்!
நீங்கள் வரும் பாதையிலே
எங்கள் ஆவலும், நட்பும் மலர் தூவி அணிவகுத்து நிற்கும்
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தம் ஆகட்டும்
உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் எதிர்வரும் சாதனைகளுக்கு விருட்சமாகட்டும்
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள் ....
அந்த அன்பு மழையில் எங்கள் வசந்தமும் வரலாறாகட்டும்
அவசரமில்லாமல் வாருங்கள் - ஆனால்
அவசியம் வாருங்கள் ....
நட்பின் வரவை வாசல் வந்து வரவேற்று
தோழமையின் வாழ்த்தை சேகரிப்பது
இளவழுதி & மோகனா
பொங்கல் வாழ்த்துக்கள்
உழவர்களின் மகிழ்ச்சி நாளில்
உழவர்களின் உயிரான
கால்நடைகளை (மாடு) வழிபடும்
காவிய நாளில் - உங்களின்
வாழ்வில் மகிழ்வும்
உங்களின் குடும்பத்தில் நிறைவும் பெருக
உங்கள் நண்பனின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
இளவழுதி வீரராசன்
காற்றாய் நீ!...
காற்றையும் பிடிக்க இயல வில்லை
உன்னையும் பிடிக்க இயல வில்லையே!..
இதயம் தொட்டவள்...
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி
கூந்தல்...
கடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்
கருநிற கூந்தலை காணும்போதெல்லாம்
களிப்புற்று இருந்தேன்!... ஏனோ
காளையிவனின் உள்ளமறியாமல்
காலத்தின் மேல் பழிசுமத்தி - என்
காதலை உதறி தள்ளியது போல - உன்
காற்றாட்டு கூந்தலை
கால் அளவுக்கு நறுக்கியதேனடி!..
காலத்தால் மாற்றமுடியாதது
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும்
காலத்தால் மாற்றமுடியாததடி!...
புரியாத புதிராய்...
மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?
பறித்தல் தகுமோ?
கண் பார்வை பறிபோகும் என்றார்கள்
நான் - உன்
புன்னகையை மட்டும் தானே
கண்டேன் - பிறகு ஏன்
என்னையே பரிதவிக்க பறித்துசென்றாய்?
பிரியமானவளே!...
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்
மறத்தல் தகுமோ
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?
கரைசேர்ப்பாயா
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?
பிரிவு
திசையெங்கும் நட்பினை நீ பெற்றாய்!
எந்த சூழலிலும் உன் சிரிப்பால்
எல்லாரையும் கலகலப்பாக்குவாய்! - ஆம்
மலர்ந்த உன் முகத்துக்கு
மகுடமாய் உன் சிரிப்பு!
உன் சுற்றத்தை எப்போதும்
மகிழ்வுடன் இருக்க செய்தவளே!..
அனைவரின் முகத்திலும் எந்நேரமும்
புன்னகையை பொன்னகையாக்கியவளே!
என் புன்னகையை மட்டும்
உன்னுடனே எடுத்து சென்று
என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியதேனடி?
எனக்கானவளாய் நீ இருந்தும்
என்னவளாக நீ மாறாமல் போனதேனடி?
பூண்டி அய்யா...
தாய்மை...
பூண்டி அய்யா
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
நான் பிறந்த மண்...
காலை பனியில் கால்தடம் பதித்து
கவலையின்றி வயல்வரப்புகளில்
நெல்மனமும் மண்மணமும் நுகர்ந்து
நெருங்கிய தோழனோடு பகிர்ந்துண்டு
பள்ளி சென்ற காலங்களும் - விடுமுறையின்
பாதிபொழுதை குளத்திலும் மீதி நேரத்தை
விளையாட்டுமாய் வாழ்ந்த நாம்
வீரம்விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா..?
அதனால் தான்
உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு...,
உள்ளத்தில் ஒரு மகிழ்வு...,
என் மண்ணை நினைத்ததும்!
(இக்கவிதைக்கான விதையை தந்த மலர்விழி அக்காவுக்கு நன்றி)
இலக்கு
வெற்றிடம்...
கனவுகளின் தேவதையே!...
நடத்திய கனவு கண்ணாம்பூச்சியில்
நீண்ட உன் கரிய கூந்தலுடன்
கண்மையிட்ட காந்த கண்களுடன்
ஆப்பிள் பழ கன்னத்துடன்
முத்தரிசி பல்வரிசையுடன்
செர்ரிபழ உதடுகளால்
உன் சின்ன சிரிப்பில்
என் செல்ல மனசை
கொள்ளை கொண்டவளே!...
நேரில்!..
என்னருகில் நீயிருந்த
இந்த இருநாட்களும்
இரண்டு ஆயுள் வாழ்ந்த
இன்பம் இருக்குதடி!...
உன்னருகில் நான்...
எல்லோரையும் அரவணைத்து - நீ
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை
இருக்க செய்பவளே!... - ஒரு
நாழிகை உன்னருகில்
நானிருந்தால்...
ஒரு யுகம் வாழ்ந்த
அர்த்தம் கிடைக்குதடி!...
மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..
மீண்டு(ம்) வருவான்!...
வாய்ப்பு...
உன் பொற்பாதங்களில்
தவழும் முத்தழகு கொலுசாக
வாழ்வின் இறுதிவரை
வந்திடும் வாய்ப்புதனை
தந்திடுவாயா
கோபம்..
வெல்வோம் தமிழீழம்...
ஒவ்வொருவரும் ஓரனியில்
எம்மின அடையாளமே!...
எங்களின்தலைவனே!...
உன் அடி பற்றி
உன் தலைமையில்
மாவீரர் தின சபதமேற்று
நம்மின தாகம் தீர்க்க
நம் மண்ணை மீட்டெடுக்க
மீண்டும் அணிதிரள்வோம்
பகைவர் படை அகற்றி
வஞ்சகர் முகம் கிழிக்க
தலைவனின் வழிகாட்டுதலில்
புலியாய் புறப்படுவோம்.....
தமிழீழம் வெல்வோம்....
தரணியில் தலை நிமிர்வோம்!...
உன்னால் மட்டும்..
என் சுவாசம்...
என் எண்ணங்களாய் அமைந்தவள்...
காந்த கண்கள்
சுகமாக வருடவரும்
கருமேக கூந்தல் - என
என் எண்ணங்களாக
எனக்கமைந்த
என்னவள் தன்
விருப்பமென சொன்னவை
எல்லாமே என்
விருப்பமாய் இருந்தது
இதை விட வேறென்ன
வேண்டுமெனக்கு!...
முதல் அறிமுகம்...
வெண்ணிற மேகங்கள் போல
பால் நிறத்தவளே!...
வெளிர்நீல புடவையில்
சங்கரன் குடியிருக்கும் ஊரினில்
செட்டிநாட்டு காரை வீட்டினுள்
கரைபுரண்ட சந்தோசத்துடன்
காளையிவனின் மனம் கவர்ந்த
காரிகையே - நீ
சின்ன சின்ன தேவதைகளுக்கு நடுவே
பேரழகியாக இன்முகத்துடன் - என்
குடும்பத்தினை வரவேற்று - உன்
குடும்பத்தினருக்கு அறிமுகபடுத்திய
நொடியினில் உன் கண்களில்
கண்ட ஆனந்தத்தில் - என் தாய்
அடைந்த பரவசத்தில் - நீ
என் தேவதைகளின் தேவதையாக
மாறிப்போனாய்!....
எனக்கானவள்....
ஏமாற்றம்...
சிந்தனைகளிலும் - நீ
இருந்ததினால் - என்
வாழ்வாய் வருவாய் என
எண்ணி இறுமாப்பு
கொண்டிருந்தேன்!...
என் எதிர்படும்
நேரங்களில் எல்லாம்
உன் உதட்டோர
புன்னகையால்
என்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுதி
என் வாழ்வின்
பரிணாமத்திற்கு வித்திட்டாய்
என் மார்தட்டி
மகிழ்ந்திருந்தேன்!...
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஏதோ ஒரு பொழுதினில்
ஏழிரண்டு மாதங்களாய்
என்னில் வசந்தத்தை
வரசெய்தவளே!...
உன் வாசல் வந்து
என் காதல்தனை சொல்ல
எத்தனித்த வேளையில்
அருகினில் இருந்தவனை
அழைத்து - என் காதலன் என
அறிமுகபடுத்திய நொடியினில்
கல் பட்ட கண்ணாடி
போலானதடி - உன்னை
சுமந்திருக்கும் என இதயம்!.....
என்னவள்...
எல்லாமும் நீயாய்....
என் தாயிடம் கண்ட
பாசமும் அரவனைப்பும்
என் தந்தையிடம் கண்ட
வழிகாட்டுதலும் கண்டிப்பும்
என் சகோதரனிடம் கண்ட
அன்பும் அக்கறையும்
என் நண்பர்களிடம் கண்ட
ஒற்றுமையும் உதவிகளும்
உன் ஒருத்தியால்
எனக்கு தர இயலுகிறதே
என்பதை என்னும் போது
என்னின் எல்லாமுமாக
நீயே தோன்றுகிறாய்!....
என் மோகனமே!....
உன்னால்.......
உன்னின் எழுத்துக்களை
பார்க்கும் பொழுதுகளில்
என்னில் எழும் உற்சாகம் …..
உன்னின் குரல்
கேட்கும் நொடிகளில்
என்னில் பரவும் சந்தோசம் …..
உன்னின் சின்ன சின்ன
செல்ல சீண்டல்களில்
என்னில் ஏற்படும் பரவசம்….
நாலெட்டு வருடங்களாய்
தவமிருந்து நறுமுகையே
உன்னை கண்டெடுத்ததன்
அர்த்தம் விளங்குதடி……
கைபிடித்து வருவாயா
கண் கொண்டு பாராமல்
காரணம் யாதுமில்லாமல்
காற்றினில் மிதக்க விட்டாய் – என் மனதினை.....
காலமெல்லாம் இந்த சந்தோசம்
கிடைக்க கண்மணியே - என்
கைபிடித்து வருவாயா
காற்றில் என் இறுதி
மூச்சு இருக்கும் மட்டும் …….
என் கவிதைகளின் நாயகி
வெற்று பக்கங்களாய்
இருந்த என்
வாழ்வு புத்தகத்தின்
மொத்த பக்கங்களையும் – தன்
அன்பாலும் பாசத்தாலும்
காதலாலும் வாசமுள்ள
வசந்தமான வாசிக்க
இயன்ற புத்தகமாக
மாற்றி அமைத்தவள் இனி வரும் என்
கவிதைகளின் கர்ப்பக விருச்சம்!...







