என் தோழியே!...

என் தோழியே!...
என் நட்புக்கு அடித்தளமிட்டவளே...
என்னையும் சாதிக்க தூண்டியவளே!...
என் எழுத்துக்களின் விருச்சமாய் அமைந்தவளே!...
என்னையே எனக்கு புதிதாய் தந்தவளே! ...
என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
தந்த அலுவலகத்தில் - நீ
என்னை கடந்து சென்ற சந்தர்ப்பத்தில்
என்னையே எனக்கு மீட்டு தந்த - உன்
ஒத்தை சிரிப்பு கூட கிடைக்காத தருணத்தில்
என் ஒத்தை இதயத்தை
ஓராயிரம் பேர் சம்மட்டியால்
ஓங்கி அடித்தது போல
ஒரு வலி தந்ததேனடி?.........

உயிரானவளே...

கதிரவன் முகம் காட்டும்
காலை பொழுதில்... கண்ணே!...
காற்றினில் அலைபாயும் - உன்
கார்மேக கூந்தலுடன்...
ஒத்தை உதட்டு சுழியில் - என்
ஆண்மையை அசைத்து விடும்
ஆழப்பார்வையால் என்
உயிர் வாங்கியதேனடி?...

அறியா காரணம்

மாலை வெயிலின்
மங்கிய வெளிச்சத்தில்
மஞ்சள் நிறத்தவளே! - உன்
கொஞ்சும் புன்னகையில்!.. - என்னை
கொள்ளை கொண்டவளே!...
அர்ச்சுனனின் வில்லை ஞாபகப்படுத்தும்
உதட்டினை உடையவளே!...
உன் மனதை போன்ற
வெள்ளை முத்தரிசி பற்கள்!..
அடர்ந்த புருவங்கள்
அந்த காந்த கண்கள்
பீன்ஸ் விரல்கள்
அறைநிலவாய் நகங்கள்
அமைதியான அர்த்தமான
ஆர்ப்பட்டமில்லா அன்பு வார்த்தைகளை
வெளிப்படுத்தும் குணம்
இன்னும் இன்னும்
உன்னிடம் நான்
கட்டுண்டதற்க்கான
காரணம்.. ஏராளம்
ஆனால்
காரணம் ஒன்று சொல்லடி
என் கண்ணே
என் காதலை உதறியதற்க்கு!

உன்னோடு...

ஒரு நாள் ஒரு பொழுது
உன் பாசத்தை நீ கொடுத்தால்
உன் அருகாமையை எனக்கு உணர்த்தினால்
உன் அன்பினை அள்ளி தந்தால்
உன் கையால் உணவருந்தினால்
உன் கண்களில் உலகினை கண்டால்
உன்னுடன் வீதிகளில் உலா வந்தால்
உன்னுடன் நம் உறவுகளை சந்தித்தால்
உனக்காக நான் துடிக்க அனுமதித்தால்
உனக்காக என்னையே அர்ப்பணிக்கவிட்டால்
அந்த நாள் அந்த பொழுது
இந்த உலகில் நான் உச்சம் அடைவேனடி!....


நாள் எதுவோ?

எல்லாருக்கும் பிடித்தமானவளே!...
எனக்கு மட்டும் பிரியமானவளே!...
மையிட்ட உன் காந்த கண்களா - என்
மாலையினை தாங்கபோகும் உன் தோள்களா
மையல் கொள்ளும் உன் அன்னநடையா
மனதை மயக்கும் உன் மந்திர பேச்சா
கொடியிடை குயிலே!.. என்னை
கொள்ளை கொண்ட மயிலே!...
உலகத்து அழகினை எல்லாம் - நான்
உன்னிடமிருந்து ரசிக்கப்போகும் நாள் எதுவோ?


என் காதலியே!..

என் காதலியே!.. - உனக்காக
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும்
காவியம் படைத்திடுவேன் - உன்
கண் அசைவு கிடைத்து விட்டால்
காலத்தையும் மாற்றி அமைப்பேன்

பிரியமானவளே!...

பிரியமானவளே!...
பிரியாவிடை தரும் முன்
பிரியமுடன் நீ பார்த்த
பார்வையின் பொருள் என்னவோ?

அம்மா...

எனது 100 வது படைப்பு இது...


அய்யிரண்டு மாதம் என்னை
ஆசையோடு வயிற்றில் சுமந்தாய்...
அய்யாறு வருடம் என்னை
அன்போடு நெஞ்சில் சுமக்கிறாய்...
நவீன வசதிகள் இல்லாத கிராமத்தில்
நாகரிகமாய் எம்மை வளர்த்தாய்....
படுக்கை வசதிக்காக - உன் துணிகளையே
படுக்கையாய் எமக்கு மாற்றி தந்தாய்....
படிப்பறிவில்லாத நீ உன் பிள்ளைகளை
பட்டபடிப்புக்கு அனுப்பி தீருவேன் - என
சபதமேற்றாய்.... சத்தியம் செய்தாய்....
சற்றும் ஓய்வின்றி உன்
ஆயுளை எமக்காய் அர்ப்பணித்தாய் - உன்
ஆசைகளை எங்களுக்காய் புறந்தள்ளினாய் ....
என்ன தவம் யாம் செய்தோம்
எம் அன்னையாய் உன்னை பெற!..
என்ன செய்து எம் கடன் அடைப்போம்
உன் ஆசைகளை நிறைவேற்றுவதை தவிர!....


திருமண அழைப்பிதல்..

வாழ்க்கை எனும் பூஞ்சோலையில்...
எங்களையும் மணமுள்ள மலராக்கும்
எங்கள் இதயத்திலிருக்கும் தோழமையே...
எதிர்வரும் 12-02-2010 வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி துளிகள் வரை ...
குதுகலமூட்டும் இந்த நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள்!

ஆம்! இந்த காலை பொழுதில் ஆரம்பமாகிறது
உங்கள் நட்புகள் -

நாங்கள் இருகரம் பற்றும் இல்லறத் தொடக்கவிழா !
இந்த நாளில் உங்களின் வருகைக்காகவும் வாழ்த்துதலுக்காகவும்
ஒரத்தநாடு LGVK திருமண மண்டபத்தில் - மணவறையில்
வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்

எங்களை வாழ்த்தும் முப்பத்து முக்கோடி தேவர்களில்
நீங்களும் ஒருவர் என எண்ணி அகமகிழ்கிறோம்!
நீங்கள் வரும் பாதையிலே
எங்கள் ஆவலும், நட்பும் மலர் தூவி அணிவகுத்து நிற்கும்
உங்கள் வருகை எங்களுக்கு வசந்தம் ஆகட்டும்
உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் எதிர்வரும் சாதனைகளுக்கு விருட்சமாகட்டும்
மேகமாய் வந்து மழையாய் வாழ்த்துங்கள் ....
அந்த அன்பு மழையில் எங்கள் வசந்தமும் வரலாறாகட்டும்

அவசரமில்லாமல் வாருங்கள் - ஆனால்
அவசியம் வாருங்கள் ....

நட்பின் வரவை வாசல் வந்து வரவேற்று
தோழமையின் வாழ்த்தை சேகரிப்பது
இளவழுதி & மோகனா


பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழர்களின் திருநாளில்
உழவர்களின் மகிழ்ச்சி நாளில்
உழவர்களின் உயிரான
கால்நடைகளை (மாடு) வழிபடும்
காவிய நாளில் - உங்களின்
வாழ்வில் மகிழ்வும்
உங்களின் குடும்பத்தில் நிறைவும் பெருக
உங்கள் நண்பனின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
இளவழுதி வீரராசன்

காற்றாய் நீ!...

காற்றை போலனவளா நீ - என்னால்
காற்றையும் பிடிக்க இயல வில்லை
உன்னையும் பிடிக்க இயல வில்லையே!..

கனவுகளில் நீ!...

உன்னோடு வாழும் வாழ்க்கை
கனவுகளில் மட்டும் தான் என்றால்
பகலே எனக்கு வேண்டாமடி...

இதயம் தொட்டவள்...

அதிராமல் வெளிப்படும் உன்
அன்பு வார்த்தைகளும்
கனிவான உன்
கருணை பார்வையும்
ஆப்பிள் கன்னமும்
அழகாய் அமைந்த
குடைமிளகாய் மூக்கும்
குண்டு கண்களும்
சின்ன உதடுகளில்
மெல்ல வழிந்தோடும்
உன் சிரிப்பும் - என்
சிந்தனைகளை சிதறடிக்கவில்லை!..
மாறாக
ஆயிரமாயிரம் கொளுசுகளில் - உன்
ஒத்தை கொளுசொலி - என்
உயிர் வாங்கி...
இதயத்தின்
அடி தொட்ட நாளில்...
அடியேன் உன்னிடம் - என்
ஆயுளை ஒப்படைத்தேனடி

கூந்தல்...

கருமேக கூட்டம் போன்ற
கடல் அலையை ஞாபகபடுத்தும் - உன்
கருநிற கூந்தலை காணும்போதெல்லாம்
களிப்புற்று இருந்தேன்!... ஏனோ
காளையிவனின் உள்ளமறியாமல்
காலத்தின் மேல் பழிசுமத்தி - என்
காதலை உதறி தள்ளியது போல - உன்
காற்றாட்டு கூந்தலை
கால் அளவுக்கு நறுக்கியதேனடி!..

காலத்தால் மாற்றமுடியாதது

உன்னோடு வாழ்தல்
இயலாத போதும்
உன்னோடு கனவுகளில்
களம் அமைத்து
உரையாடுவதும் உறவாடுவதும்
காலத்தால் மாற்றமுடியாததடி!...

புரியாத புதிராய்...

மின்னலை போல
ஒற்றை ஒளிக்கீற்றாய்
உன் ஒரு புன்னகையில்
என் ஒட்டுமொத்த வாழ்வை
மொத்தமாக புரட்டி போட்டவளே!
ஒத்தை வார்த்தை சொல்லி - என்னை
ஒதுக்கி தள்ளியதேனடி?

பறித்தல் தகுமோ?

மின்னலை பார்த்தால்
கண் பார்வை பறிபோகும் என்றார்கள்
நான் - உன்
புன்னகையை மட்டும் தானே
கண்டேன் - பிறகு ஏன்
என்னையே பரிதவிக்க பறித்துசென்றாய்?

பிரியமானவளே!...

சாதி எனும் சம்பிரதாய சடங்குகளில் - என்
பிரியமானவளின் பிரிய காதலை
சமாதியாக்கிய என் அவல சமுதாயமே!...
பிரியமானவளின் கரங்களுக்குள்
பிரியமுடன் ஒருநொடி வாழ்ந்ததுண்டா?
பிரியமானவளின் மூச்சு காற்றை
பிரியத்துடன் சுவாசித்ததுண்டா?
பிரியமானவளின் நெருக்கத்தின் சூடு
பிரியத்துடன் அனுபவித்ததுண்டா?
பிரியமானவளின் நினைப்பே மகிழ்ச்சியடைய வைக்குமே
பிரியத்துடன் மனதில் அதை உணர்ந்ததுண்டா?
பிரியம் பிரியமானவளிடம் மட்டுமே வரும் - இதோ என்
பிரியமானவளிடம் நான் பிரியமுடன்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!..
வரும் தலைமுறையாவது தழைத்திட
சாதி மதமற்ற சமத்துவ காதலை
பிரியமுடன் வாழ வைப்போம்

மறத்தல் தகுமோ

உன்னை நீ மறக்க சொன்னாய் என்பதற்காக
உன்னை மறக்க நினைத்து; யதார்த்த
வாழ்வில் கால் பதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் - நீ
குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பாக
பள்ளிமாணவியின் பயமில்லா செயலில்
கல்லூரிமாணவியின் செல்ல சில்மிசங்களில்
இளமங்கைகளின் வெட்க நாணத்தில்
தாயின் பாசத்தில் பரிதவிப்பில்
தந்தையின் அன்பில் அக்கரையில்
ஆசானின் கண்டிப்பிலும் வழிகாட்டுதலிலும்
இப்படி என் எதிர்படும் எல்லோரின்
ஏதோ ஒரு செயலில் உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறாயேடி - பிறகு
எப்படியடி உன்னை நான் மறக்க இயலும்?

கரைசேர்ப்பாயா

என் எண்ணங்களில் நீந்தி
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?

பிரிவு

தித்திக்கும் உன் பேச்சால் திரும்பிய
திசையெங்கும் நட்பினை நீ பெற்றாய்!
எந்த சூழலிலும் உன் சிரிப்பால்
எல்லாரையும் கலகலப்பாக்குவாய்! - ஆம்
மலர்ந்த உன் முகத்துக்கு
மகுடமாய் உன் சிரிப்பு!
உன் சுற்றத்தை எப்போதும்
மகிழ்வுடன் இருக்க செய்தவளே!..
அனைவரின் முகத்திலும் எந்நேரமும்
புன்னகையை பொன்னகையாக்கியவளே!
என் புன்னகையை மட்டும்
உன்னுடனே எடுத்து சென்று
என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியதேனடி?
எனக்கானவளாய் நீ இருந்தும்
என்னவளாக நீ மாறாமல் போனதேனடி?

பூண்டி அய்யா...


(26-11-09 அன்று எனது நண்பர் சரவணன் திருமணத்தை நடத்தி வைக்க ஒரத்தநாடு வந்த பூண்டி அய்யாவை வரவேற்று எழுதிய கவிதை)

ஏழை பணக்காரன்
ஏதும் உனக்கு தெரியாது
படிக்கணும் என வந்தால்
பல்லக்கில் வைக்க தயங்கியதில்லை நீ
காந்தியத்தை கற்று தர
கற்கும் மாணவனின் நலமறிய
கால்வலிக்க நம்மின்
கல்லூரியை சுற்றிவர தயங்கியதில்லை நீ
சில நேரம் தகப்பனாக,
பல நேரம் தாயாக,
எப்போதும் எங்கள் குருவாக
இப்போதும் வழிகாட்டியாக
என்றென்றும் நல்ல தோழனாக
எம்மை செழுமை படுத்தும்
எங்கள் அய்யாவே - இன்று
உங்கள் மாணவனின்
திருமணத்தை நடத்தி
வைக்க வருகைதரும்
உங்களை வரவேற்பதில்
உங்களால் வளம் காணும்
உங்கள் மாணவர்கள்
நாங்கள் பெருமையடைகிறோம்

தாய்மை...

கண்ணே!..
நம் அன்பின்
அடையாளத்தை ஈன்றெடுக்க
பத்து மாதம் - நீ
பட்ட அவஸ்தைகளை
பக்கத்திலிருந்து
பார்க்க மட்டும்தானே
முடிந்தது - உன்
கஷ்டங்களில் பங்கெடுக்கும்
பாக்கியமில்லாமல் போனதேனடி!

பூண்டி அய்யா


(பழைய தஞ்சை மாவட்டத்துக்கு கல்வியை இன்றும் இலவசமாய் தரும் எங்கள் கல்வி தந்தை பூண்டி அய்யா  (தாளாளர், பூண்டி திரு புஷ்பம் கல்லூரி))


எளிமையின் திருஉருவே!..
எங்களின் குருவே!..
கற்றோருக்கு சென்ற
இடமெல்லாம் சிறப்பு - ஆனால்
உம்மால் வளர்ந்ததே
எம் சிறப்பு!...
காந்தி நம் தேசப்பிதா
நீங்கள் எங்களின் பிதா!...
கதர்சட்டைக்கு ஒரு
மரியாதை உண்டு
ஆனால் - நீங்கள்
அணிந்ததால் அது
காவியமாகிறது!..
உங்கள் பேச்சாற்றல்
எங்களை சிந்தனைவாதியாக்கியது!..
உங்களின் வாழ்வுமுறை
எம்மை சாதிக்கதூண்டியது!...
எவ்வளவோ எமக்கு
கற்றுதந்தீர்...
இவ்வளவும் உம்மிடம்
பயின்ற பின்பு
நாங்கள்
தலைநிமிரா விட்டால்
தவறில்லையா அய்யா?...
உங்கள் மாணவர்கள்
நாங்கள் - தலைநிமிர்ந்தே
நடப்போம் - உம்மின்
ஆசியோடும்...
வழிகாட்டுதலோடும்....

நான் பிறந்த மண்...

காலை பனியில் கால்தடம் பதித்து

கவலையின்றி வயல்வரப்புகளில்

நெல்மனமும் மண்மணமும் நுகர்ந்து

நெருங்கிய தோழனோடு பகிர்ந்துண்டு

பள்ளி சென்ற காலங்களும் - விடுமுறையின்

பாதிபொழுதை குளத்திலும் மீதி நேரத்தை

விளையாட்டுமாய் வாழ்ந்த நாம்

வீரம்விளைந்த மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா..?

அதனால் தான்

உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு...,

உள்ளத்தில் ஒரு மகிழ்வு...,

என் மண்ணை நினைத்ததும்!


(இக்கவிதைக்கான விதையை தந்த மலர்விழி அக்காவுக்கு நன்றி)

இலக்கு

எவ்வளவோ முயற்சித்தும்
எட்டிப்பிடிக்க இயலாத
நிலவாகவே உள்ளாயே!....
என்ன செய்து
உன்னை அடைவேன்
என் கண்ணம்மா?....

வெற்றிடம்...

என் கனவுகளின் தேவதையே!..
உன்னால் ஏற்ப்பட்ட வெற்றிடம்
ஒரு கோடி பேரின் ஒட்டுமொத்த
அன்பால் கூட நிரப்ப முடியாதடி!...

கனவுகளின் தேவதையே!...

நாழிரண்டு வருடங்களாய் - நீ
நடத்திய கனவு கண்ணாம்பூச்சியில்
நீண்ட உன் கரிய கூந்தலுடன்
கண்மையிட்ட காந்த கண்களுடன்
ஆப்பிள் பழ கன்னத்துடன்
முத்தரிசி பல்வரிசையுடன்
செர்ரிபழ உதடுகளால்
உன் சின்ன சிரிப்பில்
என் செல்ல மனசை
கொள்ளை கொண்டவளே!...
நேரில்!..
என்னருகில் நீயிருந்த
இந்த இருநாட்களும்
இரண்டு ஆயுள் வாழ்ந்த
இன்பம் இருக்குதடி!...

உன்னருகில் நான்...

எந்நேரமும் புன்னைகையுடன்
எல்லோரையும் அரவணைத்து - நீ
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை
இருக்க செய்பவளே!... - ஒரு
நாழிகை உன்னருகில்
நானிருந்தால்...
ஒரு யுகம் வாழ்ந்த
அர்த்தம் கிடைக்குதடி!...

மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..

ஏழுமுறை எம்தலைவனை
ஏற்கனவே கொன்ற
எமகாதகர்களே!...
எம்மின அடையாளம்
எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது!...
விடுதலை போராட்டத்துக்கு
விடிவு ஒன்றே தீர்வு!...
தமிழர்களின் தாகத்திற்கு
தமிழீழம் மட்டுமே முடிவு!...
வீழ்ச்சி எமக்கு புதிதல்ல
வீழ்வதும் மீண்டு எழுவதும்
விடுதலை புலிகளின் இயல்பு!...
இழந்த எம் தாய் மண்ணை மீட்டெடுக்க
இறந்ததாய் நீவிர் சொல்லும்
தமிழீழ நாயகன்
மீண்டு(ம்) வருவான்!...

வாய்ப்பு...

குங்கும நிறத்தவளே
உன் பொற்பாதங்களில்
தவழும் முத்தழகு கொலுசாக
வாழ்வின் இறுதிவரை
வந்திடும் வாய்ப்புதனை
தந்திடுவாயா

கோபம்..

பாசமிருக்கும் இடத்தில தான்
கோபம் இருக்கும் - என
கேள்வி பட்டதுண்டு!.. - ஆனால்
உன் மீது நான் வைத்த பாசத்தால்
கோபம் என்னவென்பது கூட
மறந்தேன் என் அன்பே!...

வெல்வோம் தமிழீழம்...

ஒன்றாய் இரண்டாய்
ஒவ்வொருவரும் ஓரனியில்
எம்மின அடையாளமே!...
எங்களின்தலைவனே!...
உன் அடி பற்றி
உன் தலைமையில்
மாவீரர் தின சபதமேற்று
நம்மின தாகம் தீர்க்க
நம் மண்ணை மீட்டெடுக்க
மீண்டும் அணிதிரள்வோம்
பகைவர் படை அகற்றி
வஞ்சகர் முகம் கிழிக்க
தலைவனின் வழிகாட்டுதலில்
புலியாய் புறப்படுவோம்.....
தமிழீழம் வெல்வோம்....
தரணியில் தலை நிமிர்வோம்!...

உன்னால் மட்டும்..

என்
செல்ல சகியே....
சின்ன சிலையே....
எடையில்லா இடையே...
நாலு பேரால் நான்
சுமக்கப்படும் நாள் வரை
வற்றாத உன் அன்பால் - இந்த
வையகத்தில் வானுயரம்
தொட செய்!...

என் சுவாசம்...

காதல் காற்றை போல
அதனால் தான் நேசிக்கிறேன்...
நீ என் உயிராய் போனாய்
அதனால் தான் சுவாசிக்கிறேன்.....

நீ ...

முக்கனிகளின் மொத்த சுவை
எக்கணமும் என்னின் துணை

என் எண்ணங்களாய் அமைந்தவள்...

சுண்டி இழுக்கும்
காந்த கண்கள்
சுகமாக வருடவரும்
கருமேக கூந்தல் - என
என் எண்ணங்களாக
எனக்கமைந்த
என்னவள் தன்
விருப்பமென சொன்னவை
எல்லாமே என்
விருப்பமாய் இருந்தது
இதை விட வேறென்ன
வேண்டுமெனக்கு!...

முதல் அறிமுகம்...

ஊதா நிற வானத்தில் தென்படும்
வெண்ணிற மேகங்கள் போல
பால் நிறத்தவளே!...
வெளிர்நீல புடவையில்
சங்கரன் குடியிருக்கும் ஊரினில்
செட்டிநாட்டு காரை வீட்டினுள்
கரைபுரண்ட சந்தோசத்துடன்
காளையிவனின் மனம் கவர்ந்த
காரிகையே - நீ
சின்ன சின்ன தேவதைகளுக்கு நடுவே
பேரழகியாக இன்முகத்துடன் - என்
குடும்பத்தினை வரவேற்று - உன்
குடும்பத்தினருக்கு அறிமுகபடுத்திய
நொடியினில் உன் கண்களில்
கண்ட ஆனந்தத்தில் - என் தாய்
அடைந்த பரவசத்தில் - நீ
என் தேவதைகளின் தேவதையாக
மாறிப்போனாய்!....

எனக்கானவள்....

என் வலைபக்கத்தின்
வசந்தங்களே!...
என் தோழர்களே!....
காதலை மட்டுமே
காதலித்து வந்த
என்னை
காதலியையும்
காதலிக்கும்
காதலனாக மாற்றிய
என் காதலியும்
வருங்கால மனைவியுமான
என் மோகனாவை
உங்களுக்கு
அறிமுகபடுத்துவதில்
ஆனந்தமடைகிறேன்!...

ஏமாற்றம்...

என் எண்ணங்களிலும்
சிந்தனைகளிலும் - நீ
இருந்ததினால் - என்
வாழ்வாய் வருவாய் என
எண்ணி இறுமாப்பு
கொண்டிருந்தேன்!...

என் எதிர்படும்
நேரங்களில் எல்லாம்
உன் உதட்டோர
புன்னகையால்
என்னுள் ஒரு
மாற்றத்தை ஏற்படுதி
என் வாழ்வின்
பரிணாமத்திற்கு வித்திட்டாய்
என் மார்தட்டி
மகிழ்ந்திருந்தேன்!...

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
ஏதோ ஒரு பொழுதினில்
ஏழிரண்டு மாதங்களாய்
என்னில் வசந்தத்தை
வரசெய்தவளே!...
உன் வாசல் வந்து
என் காதல்தனை சொல்ல
எத்தனித்த வேளையில்
அருகினில் இருந்தவனை
அழைத்து - என் காதலன் என
அறிமுகபடுத்திய நொடியினில்
கல் பட்ட கண்ணாடி
போலானதடி - உன்னை
சுமந்திருக்கும் என இதயம்!.....

என்னவள்...


புதிதாய் தண்ணீர்
நிரம்பிய குளத்தினில்
தாமரை இதழ்களுடன்
மலர்ந்திருக்கும்
ஒற்றை அல்லி போல
என் மனதினில்
மோகனமாய் - நீ
மட்டும்!.....

எல்லாமும் நீயாய்....

என் தாயிடம் கண்ட

பாசமும் அரவனைப்பும்

என் தந்தையிடம் கண்ட

வழிகாட்டுதலும் கண்டிப்பும்

என் சகோதரனிடம் கண்ட

அன்பும் அக்கறையும்

என் நண்பர்களிடம் கண்ட

ஒற்றுமையும் உதவிகளும்

உன் ஒருத்தியால்

எனக்கு தர இயலுகிறதே

என்பதை என்னும் போது

என்னின் எல்லாமுமாக

நீயே தோன்றுகிறாய்!....

என் மோகனமே!....

உன்னால்.......

உன்னின் எழுத்துக்களை

பார்க்கும் பொழுதுகளில்

என்னில் எழும் உற்சாகம் …..

உன்னின் குரல்

கேட்கும் நொடிகளில்

என்னில் பரவும் சந்தோசம் …..

உன்னின் சின்ன சின்ன

செல்ல சீண்டல்களில்

என்னில் ஏற்படும் பரவசம்….

நாலெட்டு வருடங்களாய்

தவமிருந்து நறுமுகையே

உன்னை கண்டெடுத்ததன்

அர்த்தம் விளங்குதடி……

கைபிடித்து வருவாயா

கடந்து சென்ற பெண்களில்
கண் கொண்டு பாராமல்
காரணம் யாதுமில்லாமல்
காற்றினில் மிதக்க விட்டாய் – என் மனதினை.....
காலமெல்லாம் இந்த சந்தோசம்
கிடைக்க கண்மணியே - என்
கைபிடித்து வருவாயா
காற்றில் என் இறுதி
மூச்சு இருக்கும் மட்டும் …….

என் கவிதைகளின் நாயகி

வெற்று பக்கங்களாய்
இருந்த என்
வாழ்வு புத்தகத்தின்
மொத்த பக்கங்களையும் – தன்
அன்பாலும் பாசத்தாலும்
காதலாலும் வாசமுள்ள
வசந்தமான வாசிக்க
இயன்ற புத்தகமாக
மாற்றி அமைத்தவள் இனி வரும் என்

கவிதைகளின் கர்ப்பக விருச்சம்!...

வராமல் போனாயோ...

மாறத்தான் நினைக்கிறேன்
லயிக்கவைக்கும் அழகில்
தினமும் வந்து என்னை
மானசிகமாக வாழ்த்தி
லாவகமான வார்த்தைகளால்
தினமும் என் இதயம்
வருடியவளே - என் வாழ்வின் வழித்தடம்
முழுமையாய் காட்டியவளே
இறுதி வரை என்னுடன் வராமல் போனதேன்?

என்னவளே....

உன்னை
என் தோழி என்பதா - இல்லை
என் காதலி என்பதா - இல்லை
என் மனைவி என்பதா - இல்லை
என் தாயாக வந்தவள் என்பதா -
எதுவாயினும் -
என்னில் புது மாற்றத்தை
ஏற்படுத்தியவள் - நீ...
என்னில் புது வசந்தத்தை
வர செய்தவள் நீ...
கால சூழலுக்கு
பருவ மாற்றம்
எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியமானவள்
நீ எனக்கு!....


இரவெல்லாம் நீ....

நினைவுகளில் நீந்தி - ஒவ்வொரு
நித்திரையும் தின்று - என்
எண்ணங்களில் வாழ்கிறாய்!....
என் கண்ணம்மா!....

வரம்....

என் இறைவனின் சந்நிதானத்தில்
பூஜைக்கு வந்த அர்ச்சனை பூவே!...
நூறுமுறை உன்னை பிரிந்தாலும்
ஒருமுறை நம் மண்ணில் மறைந்தாலும்
மறுமுறை பிறக்கும் போது - உன்
அன்பும், நேசமும்; இதே காதலும்
வேண்டுமென்று -என்
இறைவன் முருகனிடம்
வரம் கேட்பேன்....

என்னவளின் தேடுதல்...

எனக்கே எனக்கானவளாக
என் சுவாசத்துக்குரியவளாக
என் இதயத்திலிருந்து
உயிர் கசியும் கவிதை
வரசெய்தவள் - இன்னும்
என் பார்வையின் தேடுதலில்......
புதிய புதிய
எழுத்துக்களை பொங்கும்
என் அழகு தமிழில் பிரசவிக்க....
அவள் என் எழுத்துகளின் தேடுதலில்.....

நான்...

இவன் காதலை மட்டுமே
காதலிக்க தெரிந்தவன்
காதலியை அல்ல!....
வீ. இளவழுதி

உன் வாழ்வில் நான்...

வழிப்போக்கனாய் உன்
வாழ்வினில் சென்றுவிடவா
இல்லை - உன்
மனக்காயங்களுக்கு மருந்திடும்
மனாளனாக வந்துவிடவா?

காதல்....

உலகத்து கவிகள் எல்லாம்

உன்னை பற்றி

ஒய்யாரமாய் ஓராயிரம் உவமைகளில்

பல்லாயிரம் கவிதைகள் படைத்துவிட

அந்த கவிகளிடம் ஒவ்வொரு

எழுத்து இரவல் வாங்கி

உன்னை பற்றி ஒரு

வரி எழுதுகிறேன் - காதலே

நீ காற்றை போல !....

உன் நினைவுகள்….

விட்டு விட்டு
துடிக்கும்
இதயம் கூட
விடாமல்
துடிக்கும் - உன்னை
நினைத்து விட்டால்!....

உன் புன்னகை...

உனக்கென்ன
ஒரு பார்வை
பார்த்து
உதட்டோரம்
சிறு புன்னகை
சிந்தி சென்று
விடுகிறாய் - நீ!...
அம்மாவின்
கைபிடித்து செல்லும்
குழந்தை போல
உன்னையே
தொடர்ந்து வருகிறது
என் மனது!....

செவ்விதழாளே!...

செவ்விதழாளே!...
அடிக்கடி
நீ கொள்ளும் கோபத்தை
அன்றும் என் மீது
காட்டினாய் நீ!..
உன் பொய் கோபத்தை
ரசித்தபடி,
என் விரல்களுடன்
விளையாட...
அலை போன்ற
வளைந்து நெளிந்து
செல்லும் உன்
கூந்தலுக்கு
குடுப்பினை இல்லையோ
என கூறியதும் -
என்னை தவிர
வேறு ஒரு கேசத்தை
தொட்டுவிடுமா
உன் விரல்கள்
என செல்லமாக
என்னை அடிக்க
வரும் என் தேவதையைய்
அப்படியே அள்ளி
அணைத்துக்கொள்கிறேன் நான்!

கோபம்....

அவசர அலுவல்
நேரங்களில்
என்னிடம்
சொல்ல மறந்து நீ
அலுவலகம் விட்டு
செல்லும் சில
நாட்களில்
என்னில் எழும்
கோபம் - உன்
திருமுகமதனை
பார்த்த நொடியில்....
காலை பொழுதினில்...
கடற்கரை மணல்வெளியில்....
காற்றோடு களைந்து...
கவிதை பாடும் - உன்
கூந்தலை போல
கலைந்து விடுகிறது!...

சிந்திக்க வைத்தவளே...

நான் சிகரம்
தொட்டுவிட்டதாக
பாராட்டுபவர்களுக்கு
தெரியுமா...
என்னை -
சிந்திக்க
வைத்தவளே
நீ தான்
என்று!....

நீ.....

பொம்மை வாங்க
கடைக்கு சென்றபோது
உனக்கு என்ன
வேணும் என
கேட்ட
என் அப்பாவிடன்
உன்னை நோக்கி
கை காட்ட
நாணத்தால் சிவந்து
பொம்மைகளுடன்
பொம்மையாக
மாறிப்போனாய் - நீ!...

உன் கொளுசுகளின் ஓசை....


என்னை பெரிய
இசை கலைஞன்
என்பவர்களுக்கு
தெரியுமா?
நான்
ஏழு ஸ்வரங்களும்
கற்றது
உனது
கொளுசுகளிடம் தான்
என்பது!...

நட்சத்திரமே...

உலகத்து நட்சத்திரங்களை
எல்லாம் உனக்குள்
வைத்துக்கொண்டாயோ?....
நீ
சிரிக்கும் போது
அத்தனை
நட்சத்திரங்களும்
ஒளி(உதி)ர்கின்றனவே!...

யாதுமாகாமல் போனவளே!....


உன்னுடன் இணைந்து நடக்கும் போது...
உன்னுடன் இணைந்து உணவருந்தும் போது...
உன்னுடன் இணைந்து தேநீர் அருந்தும் போது...
உன்னுடன் இணைந்து கடைதெரு செல்லும் போது...
உன்னுடன் இணைந்து பணிபுரியும் போது...
உன்னுடன் இணைந்து பயணிக்கும் போது...
உன்னுடைய கால் கொலுசு சிணுங்கும் போது...
உனது சின்ன சின்ன சில்மிசங்களை காணும் போதும்...
வரம்பு மீறாத வாய் சண்டைகளும் ...
எல்லை மீறாத சீண்டல்களும் - நீ
எனது காதலியாக வில்லையே
என்ற ஏக்கத்தை விட - நீ
எனது மனைவியாக வில்லையே
என்ற வருத்தம் தான் மேலோங்கி நிற்கிறது !....
வீ. இளவழுதி

ஆளும் திறன்....

எனக்குள் எல்லோரையும் போல வந்தாய்

எனக்கானவளாக மெள்ள மாறிப்போனாய் - நீ

என் காதலியாகவும் இருந்தது இல்லை - இன்று

என் வாழ்க்கை துணையாகவும் இல்லை - ஆயினும்

என்னை ஆட்சி செய்யும் லாவண்யத்தை

எங்கிருந்து கற்று வந்தாய் - கண்ணம்மா!......

- வீ. இளவழுதி

காதலை யாசிக்கிறேன்....

கல்லூரி வந்த புதிதில்

களங்கமில்லா மனிதர்கள் மத்தியில் - உன்

சிநேக புன்னகையில் சிநேகிதனானேன் ...

கிடைத்த தருணங்களில் ...

பரிமாறிக்கொண்ட தகவல்களில்...

ஒருவருக்குள் ஒருவர் ஒட்டிக்கொன்டோம்

ஏதோ ஒரு தருணத்தில்

ஏதோ ஒரு கணத்தில் ...

நீ எனக்குள் காதலியாக

எனக்கே தெரியாமல் மாறிப்போனாய்..

இத்தனை நாளாக சொல்லாத காதலை

கல்லூரியின் கடைசி நாளிலும்

சொல்லாமல் செல்லலாம் தான் -

ஆனால் பின்னாளில் ஒரு நாள் - நீ

என் முன்னால் வந்து

அன்றே சொல்லி இருந்தால்

உன்னை ஆராதித்திருப்பேனே

என சொன்னால் ....

தூண்டிலிட்ட புழுவாய்

துடித்தல்லவா போகுமென்மனம்

எனவே தான் உன்னை

தொலைத்து விடாமலிருக்க

உனக்குள்ளிருக்கும்

காதலையும் யாசிக்கிறேனடி !....

--வீ.இளவழுதி.

என் உள்ளுயிர்

பத்தோடு பதினொன்றல்ல - நான்

தனித்துவமானவன்

என்பதால் தானோ - உன்

புன்னகையை - எனக்கு

பொன்னகையாக்கி

புத்தொளி பெறச்செய்தாய்!...

பின் ஏனடி என்னை

பிரிந்து சென்று உள்ளுயிர்

பறித்து சென்றாய்!...

வழிப்போக்கனின் வார்த்தைகள்...

தமிழ் போல என்னுள்

தங்கிய என் வேதமே !.... நிவேதமே!...

தன்னை பற்றி மட்டுமே

தனிப்படுத்தி காட்ட முயலும் - உலகில்

தாயைப்போல மற்றவர்களும்

தழைத்து வாழ வேண்டுமென

தவமிருப்பவளே!....

சோகங்கள் இங்கு பல உண்டு - ஆறுதல்

சொல்ல இயலாதவையும் சில உண்டு

இன்று - நானும்

உனக்கு ஆறுதல் சொல்ல

இயலாதவனாகவே உள்ளேன்!...

ஆயிரமாயிரம் பேர்

வார்த்தைகளில் ஜாலம் கோர்த்து

உன்னிடம் கொட்டி விட்டு சென்றாலும்

உன்னின் உண்மையான நேசம் மட்டும் - நீ

தோள் சாய்ந்து இளைப்பாற - உன்னை

அரவணைத்து தூக்கி விடும் -

அந்த தோழமையில் - நீ

அனைத்தையும் மறக்க வேண்டும்

புதிதாய் பிறந்ததாய் - எண்ணி;

சாதனைகள் நீ படைத்திட வேண்டும்

சரித்திரம் உன்னை பார்த்திட வேண்டும்

வார்த்தைகளை கோர்த்து உனக்கு

ஆறுதல் சொல்வதை விட

என் தோள் சாய்த்து அரவணைத்து

அழைத்து செல்லும் நட்பாக

இருக்க விரும்புவதால் சொல்கிறேன்

கவலை - நீ மறந்து ;

கணினியில் கரை கண்டிட

காலம் உன்னை போற்றிட

புதிய அத்தியாயம் - நீ படைத்திட

ஆறுதல் சொல்ல வந்த

வழிப்போக்கன் வாழ்த்துகிறேன்!...

- வீ. இளவழுதி

உன் உதட்டோர புன்னகை...

உன் மீது நான் கொண்ட காதல்

உணர்வுகளால் மட்டுமே!

காலம் நம் கனவுகளை

கலைத்தாலும் - என்

காதல் மட்டும்

கலையாது கண்மணி !...

எனக்காக எதையும் செய்வேன்

என்றவளே... என்னவளே !...

எதிர்வரும் காலங்களில்

என் எதிர்படும் நேரங்களில்

என் இதயம் மீண்டும் துடித்திட

என் உயிர் வாங்கிய

உன் உதட்டோர புன்னகையை தா!...

அது போதும் - எனக்கு

இன்னும் ஒரு ஜென்மம் வாழ்ந்திட !....

பிரிவு....

எனக்காகவே வளர்ந்தவள் போல
என்னை ஒட்டிய உன் உயரம்
அமைதியாக அலைபாயும் உன்
காந்த கண்கள் !....
நெற்றியின் மத்தியில்
அழகுக்கு அழகு சேர்க்க
அழகாக அமைந்த திருநீறு!...
செதுக்கி வைத்தார்ப்போன்ற
உன் நாசி!..
ரவிவர்மனின் தூரிகையில்
படைக்கபட்டதோ என
வியப்படைய வைக்கும்
உன் உதடுகள் !...
பள்ளாங்குழியினை
ஞாபகப்படுத்தும்
உன் கன்னக்குழி!...
என மொத்தமாக
என்னை கவர்ந்தவளே!...
உன்னுடன் வாழும்
வரம் வேண்டி...
ஒவ்வொரு நொடியும் - நான்
தவமிருக்க....
பந்தங்களின் பாசத்துக்காக
பாவியிவனை
பாதி வழியில்
பரிதவிக்க விட்டு விட்டு
சென்றதேன் கண்ணம்மா?
- வீ, இளவழுதி

என் புதினமே!

ஓரிரண்டு வருடம்
ஒளிந்து விளையாடி
ஒரு வழியாக
உன்னை சந்தித்தேன் -
ஒரு நாள்!...
அயல் தேச பயணம் செல்வதாக
அவசர கதியில் விடை பெற்று
உன் நினைவுகளை தந்து
என் நிஜத்தை எடுத்து சென்றாய்!...
மீண்டும் - உன்
தரிசனம் காண தவமிருந்தேன்
ஆறிரண்டு மாதம்;
நித்தம் நித்தம்
நாள்காட்டி முன்
நாழிரண்டு நாளிகை
நான் நின்று
ஒரு வழியாக
ஒரு வருடம் கடந்து - நீ
வரும் நாள் வர - உன்
முகம் -
நான் கண்டிட ....
வசந்தமே - நீ
வரும் வாசல்
வந்து காத்திருக்க
வழக்கம் போல
விதி சதி செய்து - உன்
தரிசனம் பெரும்
பாக்கியத்தை தடுத்தது !....
நாள் முழுக்க உன்னுடன் பேசிய
தொலைபேசியில் உன்
குரலாவது கேட்குமா - என
என் உள்மன உந்துதலில்
உறங்கும் நேரம் கூட
காத்திருக்கிறேன்...
தங்கமே! தாமரையே!...
என் புதினமே! புவனமே!
புதிராய் - நீ
மாறிப்போனதேனடி!....
--வீ. இளவழுதி

இப்பிறவியின் பயன்......

இதயம் முழுதும் நிரம்பி - கனவுகளில்
நம் வாழ்கைக்கான களம் அமைத்தவளே!.....
ஒரு முறை உந்தன் குரல் கேட்டால்
உயிருடன் வாழும் அர்த்தம் அறிவேனடி!....
ஒரு முறை உந்தன் திருமுகம் பார்த்தால்
இப்பிறவியின் பயன் அடைவேனடி!....
-- வீ. இளவழுதி

என் வாழ்வாக வந்தவளே....

என் இரண்டாம் பணியின்
முதல் தோழியானவளே - உன்
உயிர் வாங்கிய புன்னகையில் - நீ
என் வாழ்வில் முதன்மையானவளானாய்.....

உருண்டோடிய நாட்களில் - உன்
உண்மையான அன்பில் - உயிர்
கசிந்து உன் சிநேகிதனானேன்.....

என் வழிகாட்டுதலில்
வளம் காணுவதாக நீ
கூறிய நொடிகளில் - என்
வாழ்வில் மெல்ல மெல்ல
வசந்தங்களை கொண்டு வந்து
வாசம் செய்ய துவங்கினாய்.....

உனக்காக நான் செதுக்கிய
கவிதைகளை - நீ
படித்த நொடிகளில் ....
சிவந்த உன் கன்னங்கள்
மேலும் நாணத்தில் சிவக்க...
உன்னருகில் நானிருந்து உன்
வெட்கத்தை ரசித்த நொடியில் - நீ
என் காதலியாக மாறிப்போனாய்.....

உன்னோடு நான் சென்ற
இடங்கள் எல்லாம் - உன்
வருகையால் மேலும்
அழகானதை - என்
கண்ணில் நீ
கண்ட காட்சியில் - என்
வாழ்வாக வாசம்
செய்ய துவங்கினாய் .....

அலுவலக நேரங்களில்
அலுவல் இல்லா நேரங்களில்
என்னருகில் நீயோ - இல்லை
உன்னருகில் நானோ ....
நமக்கான வாழ்வைப்பற்றி
மட்டுமின்றி வரம்பின்றி
நாம் விவாதித்த விசயங்கள்....

என்னைப்பற்றி உன் வீட்டாரும்
உன்னைப்பற்றி என் உறவுகளும்
உயர்வாய் மதித்த தருணங்கள்
என
இப்படியாக நம்மைப்பற்றி
சொல்ல ஓராயிரம் இருக்க....

காலதேவனின் இரக்கமற்ற.......
உறவுகளின் இதயமற்ற........
மனதிற்க்கு ஒப்பாத
காரணம் சொல்லி - நம்
கனவு வாழ்வை
மெய்ப்பட செய்யாத
சொந்தங்களும் பந்தங்களும்
நம்மை பிரித்த சந்தோசத்தில்
திலைக்க.....

எறும்புக்கு கூட தீங்கிழைக்காத - நீயும்
எவர் மனதும் புண்படாது வாழும் - நானும்

நமது காதலின் வெற்றியை
மற்றவர்களின்
சந்தோசத்துக்காக சமர்ப்பித்து
காலத்தை வெல்ல இயலாமல்
கரை ஒதுங்கிணோம்
இரு வேறு திசைகளில்
இருவரும்.........
-- வீ இளவழுதி





இப்பிறவி....

என் எண்ணங்களின்

விதையாக விளைந்தவளே!...

என் கற்பனைகளின்

உயிர் சிலையாக வளர்ந்தவளே!....

உன்னைப் படைத்ததால்

பிரம்மன் எனக்குள்

உன்னைப் பற்றிய

சிந்தனைகளை வைத்தானா?...

இல்லை என் உயிர்க்கனவிற்கு

உருவம் தர

உன்னைப் படைத்தானா?....

புரியவில்லை - ஆயினும்....

உன்னைப் பார்த்ததாலே

இப்பிறவியின் உண்மை உணர்ந்தேனடி !.....

--வீ.இளவழுதி

உயிர்த்தெழுகிறேன்....

வான் அலைகளில்
மட்டுமே உன் சிரிப்பொலி
உணர்ந்தவன்....
முதல்முறை நேரில்
பார்த்தபோது....
மொட்டுகளில் இருந்து
மெல்ல.... மெல்ல....
விரியும் மலர்களின்
இதழ்களை போல - உன்
இதழ்களின் வழி - நீ
சிந்திய மெல்லிய புன்னகையில்
மெல்ல... மெல்ல....
உயிர்த்தெழுகிறேன்
என்னில் நான் மீண்டுமொரு முறை.....
--வீ. இளவழுதி, பின்னையூர்.